Thursday, December 24, 2020

6 th std samacheer kalvi term 2 -new syllabus

                                      group-4   மூதுரை

“மன்னனும் மாசற்க் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையந் மன்னற்குத்

தந்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு

கண்ட இடமெல்லாம் சிறப்பு”  ஒளவையார்

பொருள்

  1.   மாசற- குறை இல்லாமல்
  2.   சீர்தூக்கின் -  ஒப்பிட்டு ஆராய்ந்து
  3.   தேசம்- நாடு

ஆசிரியர் குறிப்பு

  1.   ஒளவையார்
  2.   நூல்- ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி
  3.   மூதுரை- மூத்தோர் கூறும் அறிவுரை
  4.    31 பாடல்கள் உள்ளன

Book Back

  1.   மாணவர்கள் நூல்களை மாசற கற்க வேண்டும்
  2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது இடம் + எல்லாம்
  3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மாசு + அற
  4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் குற்றமில்லாதவர்
  5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் சிறப்புடையார்

group-4 துன்பம் வெல்லும் கல்வி

”ஏட்டில் படித்த்தோடு இருந்துவிடாதே- நீ

ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதெ” – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பொருள்

  1.   தூற்றும்படி- இகழும்படி
  2.   மாற்றார்- மற்றவர்
  3.   நெறி- வழி
  4.   மூத்தோர்- பெரியோர்
  5.   மேதைகள்- அறிஞர்கள்
  6.   வற்றாமல்- அழியாமல்

ஆசிரியர் குறிப்பு

எளிய தமிழில் சமூக சீர்த்திருத்த கருத்துகளை வலியுறுத்தி பாடியவர் பட்டுகோட்டை கல்யாண் சுந்தரம் (மக்கள் கவிஞர்)

Book Back

  1.    மாணவர்கள் பிறர் தூற்றும்படி நடக்க கூடாது
  2.    நாம் மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்
  3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கை + பொருள்
  4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் மானம்மில்லா

group-4 கல்வி கண் திறந்தவர்(காமராஜர்)

  • 1 மைல் தூரத்தில் ஆரம்ப பள்ளியும், 3 மைல் தூரத்தில் நடுநிலை பள்ளியும், 5 மைல் தூரத்தில் உயர் நிலை பள்ளியும் இருக்க வேண்டும் என்றார்
  • ஆடு மேய்க்கும் சிறுவர்களை பள்ளிகூடம் செல்ல வழி செய்தவர்
  • குழந்தைகள் பள்ளி செல்வதற்காக நீண்ட தூரம் நடக்க கூடாது என்று எண்ணியவர்
  • பள்ளிக்குக் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்று நினைத்தவர்
  • கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி, அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளி கூடங்களை திறக்க செய்தவர்
  • தந்தை பெரியாரால் “ கல்வி கண் திறந்தவர்” என பாரட்ட பெற்றவர்
  • சிறப்பு பெயர்- பெருந்தலைவர், கருப்புகாந்தி, படிக்காத மேதை, ஏழைப்பங்காளர், கர்மவீரர், தலைவர்களை உருவாக்குபவர்

சிறப்பு

  1.   இலவச கட்டாய கல்வி
  2.   மத்திய உணவு
  3.   சீருடை
  4.   பள்ளி சீரமைப்பு மாநாடு
  5.   பல கிளை நூலகங்கள்
  6.   புதிதாக பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கினார்
  7.   கல்வி புரட்சிக்கு வித்திட்டவர்
  8.   காமரசருக்கு அரசு செய்த சிறப்பு
  9.   மதுரை பல்கலைகழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது
  10.   நடுவண் அரசு 1976  இல் பாரதரத்னா விருது வழங்கியது
  11.   காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விஎஉதுநகர் இல்லம் ஆகியன  அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன
  12.   சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது
  13.   சென்னையி உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
  14.   கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.200 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது

Book Back

  1.     பள்ளிகூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் ஊரில் பள்ளிகூடம் இல்லை
  2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பசி + இன்றி
  3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது படிப்பு+அறிவு
  4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் காட்டாறு

 நூலகம் நோக்கி

  1.   ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம்
  2.   முதலாவது சீனாவில் உள்ளது
  3.   அண்ணா நூற்றாண்டு நூலகம்
  4.   தரைத்   தளம் மற்றும் எட்டு அடுக்குகளை கொண்டது
  5.   மொத்த பரப்பு 8 ஏக்கர்
  6.   தரை தளம்- சொந்த நூல் பதிப்பகம்,பிரெய்லி நூல்கள்
  7.   முதல் தளம்- குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
  8.   இரண்டாவது தளம்- தமிழ் நூல்கள்
  9.   மூன்றாவது தளம்- கணிணி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  10.   நான்காவது தளம்- பொருளியல், சட்டம்,வணிகவியல், கல்வி
  11.   ஐந்தாவது தளம்- கணிதம், அறிவியல், மருத்துவம்
  12.   ஆறாவது தளம்- பொறியியல்,வேளாண்மை, திரைப்பட கலை
  13.   ஏழாவது தளம்- வரலாறு, சுற்றுலா
  14.   எட்டாவது தளம்- நூலகத்தின் நிர்வாக பிரிவு
  15.    ”இந்திய நூலக அறிவியலின் தந்தை” இரா. அரங்கநாதன்(நூலக விதிகளை உருவாக்கியவர்)
  16.   நூலகத்தில் படித்து உயர்ந்தவர்கள் –அறிஞர் அண்ணா, நேரு, அம்பேத்கார், காரல் மார்க்ஸ்
  17.   சிறந்த நூலகர்களுக்கு எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது

பாடறிந்து ஓழுகுதல்

ஆசாரக் கோவை

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும்  செய்யாமை கல்வியோடு

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை

நல்லினத் தாரோடு நட்டல்- இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து”

பொருள்

  1.   நன்றியரிதல்- பிறர் செய்த உதவியை மறவாமை
  2.   ஒப்புரவு- பிறருக்கு உதவி செய்தல்
  3.   நட்டல்- நட்பு கொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு

  1.  ஆசார கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்
  2.  ஊர்- கயத்தூர்
  3.  ஆசாரகோவை- பொருள்- நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
  4.  பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று
  5. 100 வெண்பாக்களை கொண்டது

Book Back 

  1.  பிறரிடம் நான் இன்சொல் பேசுவேன்
  2.   பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்து கொள்வது பொறை
  3. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அறிவுடைமை
  4. வை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்  இவையெட்டும்
  5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  நன்றி அறிதல்
  6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பொறை + உடைமை

கண்மணியே கண்ணுரங்கு

பொருள்

  1.   நந்தவனம்- பூஞ்சோலை
  2.   பார்- உலகம்
  3.   பண்- இசை
  4.   இழைத்து-செய்து
  5.   தாலாட்டு- வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று
  6.   தால்- பொருள்-நாக்கு

தமிழர் பெருவிழா

  1. பொங்கல்-தமிழர் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருவிழா  என்றும் அழைக்கப்படுகிறது
  2. அக்காலத்தில் போகி பண்டிகை இந்திர விழாவாக கொண்டாடப்பட்டது
  3. தை முதல் நாள்- திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது
  4. திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட நடப்பாண்டுடன் 31 ஐ கூட்டிகொள்ள வேண்டும்
  5. தை இரண்டாம் நாள்- திருவள்ளுவர் தினம்
  6. மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கி தழுவும் வீர விளையாட்டு , மாடுபிடித்தல்,ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது

அறுவடை திருநாள்

  1. ஆந்திரா, கர்நாடகா,மகாராட்டிரா,உத்திரபிரதேசம்- மகாசங்கராந்தி எனவும்,
  2.  பஞ்சாப்- லோரி எனவும்,
  3. குஜராத், இராஜஸ்தான் – உத்த்ராயன் எனவும் கொண்டாடப்படுகிறது

Book Back

  1.   கதிர் முற்றியதும் அறுவடை செய்வர்
  2.    விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் தோரணம் கட்டுவர்
  3. பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்  பொங்கலன்ற
  4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது போகி + பண்டிகை
  5. பழையன கழிதலும் புதியனபுகுதலும்.
  6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண துன்பம் தரும். 

மனம் கவரும் மாமல்லபுரம்

  1. நரசிம்மவர்மன்(வேறு பெயர் மாமல்லன்) – மற்போரில் சிறந்தவன்
  2. 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  3. தந்தை- மகேந்திரவர்ம பல்லவர்
  4. ஒரே பாறையில் செதுக்கி செய்யப்பட்ட கோவில் – இரத கோவில்
  5. ஐந்து இரதங்கள் உள்ளதால் பஞ்சபாண்டவர் இரதம் என்று பெயர்
  6. 4 தலைமுறைகளாக நடைப்பெற்றது இந்த சிற்ப பணி
  7. அர்சுனன தபசு – அர்சுனன் தவம் செய்யும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது
  8.  பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை புடைப்புசிற்பங்கள் ஆகும்

சிற்பகலை நான்கு வகைப்படும்

  • குடைவரைக் கோயிகள்
  • கட்டுமானக் கோயிகள்
  • புடைப்பு சிற்பங்கள்
  • ஒற்றைக் கல் கோயில்கள்

மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள்

  1. அர்ச்சுனன தபசு
  2. கடற்கரைக் கோவில்
  3. பஞ்சபாண்டவர் ரதம்
  4. ஒற்றைக்கல் யானை
  5. குகைக்கோவில்
  6. புலிக்குகை
  7. திருக்கடல் மல்லை
  8. கிருஷ்ணரின் வெண்ணைய்ப் பந்து
  9. கலங்கரை விளக்கம்

group-4 நானிலம் படைத்தவன்

பொருள்

  1. மல்லெடுத்த- வலிமை பெற்ற
  2. சமர்- போர்
  3. நல்கும்- தரும்
  4. கழனி- வயல்
  5. மறம்- வீரம்
  6. எக்களிப்பு- பெருமகிழ்ச்சி
  7. கலம்- கப்பல்
  8. ஆழி- கடல்

நூல்குறிப்பு

  1. முடியரசன்
  2. இயற்பெயர்- துரைராசு
  3. நூல்கள்- பாங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை,
  4. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டபெற்றவர்

Book Back

  1. போர்களத்தில் வெளிப்படும் குணம்- வீரம்
  2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கல் + எடுத்து
  3. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நான்கு + நிலம் 
  4. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நாடென்ற
  5. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்  கலமேறி

கடலோடு விளையாடு

”விடிவெள்ளி நம்விளக்கு-ஐலசா

விரிகடலே பள்ளிக்கூடம்- ஐலசா

அடிக்கும் அலை நம்தோழன் –ஐலசா”

பொருள்

  1. கதிச்சுடர்- கதிரவனின் ஓளி
  2. மின்னல்வரி- மின்னல் கோடுகள்
  3. அரிச்சுவடி- அகரவரிசை எழுத்துக்கள்

நெய்தல் திணை

  1. நிலம்- கடலும் கடல் சார்ந்த இடமும்
  2. மக்கள்- பரதர், பரத்தியர்,எயினர், எயிற்றியர்
  3. தொழில்-மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
  4. பூ-தாழம்பூ

நூல்குறிப்பு

  1. நாட்டுபுறப்பாடல்(வாய்மொழி இலக்கியம்)
  2. ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு, தொழில் பாடல்கள், விளையாட்டு பாடல்கள், தாலாட்டு பாடல்கள்- நாட்டுபுற பாடல்களில் அடங்கும்
  3. சு. சக்திவேல் தொகுத்த நாட்டுபுற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது

பொருத்துக

  1. விடிவெள்ளி-விளக்கு
  2. மணல்- பஞ்சுமெத்தை
  3. புயல்- ஊஞ்சல்
  4. பனிமூட்டம்- போர்வை

Book Back

  1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கதிர் + சுடர்
  2. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மூச்சு + அடக்கி
  3. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் பெருவானம் 

வளரும் வணிகம்

  1. பொருள்களை விற்பவர் வணிகர்
  2. பொருள்களை வாங்குபவர் நுகர்வோர்
  3. நம்மிடம் இருக்கும் பொருளை கொடுத்து தேவையான பொருளை வாங்குவது பண்டமாற்று வணிகம்(நெல்- உப்பு, ஆட்டுபால்- தானியம்)
  4. வணிகத்தின் வகைகள்- தரைவழி வணிகம், நீர்வழி வணிகம்
  5. தரைவழி வணிகம் – பொருள்களை எடுத்து செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகள் , வண்டிகள் பயன்படுத்தப்பட்டன
  6. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்கு செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகசாத்து என்பர்
  7.  நீர்வழி வணிகம்- கடல்வழியாக கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும், வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும்
  8. கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும்
  9. துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டுள்ளன
  10. தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக பூம்புகார் விளங்கியது
  11. வணிகத்தை தனிநபர் வணிகம், நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம்
  12. தனிநபர் வணிகம்- தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம்
  13. நிறுவன வணிகம்- ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு  செய்து வணிகம் நடத்துவது
  14. சிறுவணிகம்பால், கீரை, காய்கறிகள் விற்பனை செய்பவர்கள் நுகர்வோரிடம் நேரடி தொடர்பு உடையவர்கள்
  15. பெருவணிகம்பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் மொத்தமாக கொள்முதல் செய்வர். அவற்றை சிறு வணிகர்களுக்கு விற்பனை செய்வர். இவர்களுக்கு நுகர்வோருடன் நேரடி தொடர்ப்பு இல்லை
  16. ஏற்றுமதிதேக்கு, மயில்தோகை,அரிசி, சந்தனம்,இஞ்சி, மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டன
  17.  இறக்குமதிகண்ணாடி, பட்டு, கற்பூரம் இறக்குமதி செய்யப்பட்டன
  18. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன
  19. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்                                                             பிறவும் தமபோல் செயின்”- குறள்
  20. “நடுவு நின்ற நன்னெஞ்ரினோர்” – பட்டினப்பாலை
  21. இணைய வழி வணிகம்“இணையதளம் மூலம் பொருள்கள் பெறலாம்
  22. வணிகத்தின் வளர்ச்சிபண்டமாற்று முறை->பணத்தை பயன்படுத்தும் முறை->மின்னனு பரிமாற்று முறை
  23. “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து                                                                         பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி                                                                              ------                                                                                                                                   உமணர் போகலும்”- நற்றினை
  24. ”பாலாடு வந்து கூழொடு பெயரும்”- குறுந்தொகை
  25. “பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”- அகநானூறு
  26. “கொள்வதும் மிகை கொளாது                                                                 கொடுப்பதும் குறைபடாது”- பட்டினப்பாலை
  27. “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொரும்பால்                                கோடாமை சான்றோர்க்கு அணி”- திருக்குறள்

Book Back

  1. வீட்டு பயன்பாட்டுற்க்காக பொருள் வாங்குபவர்- நுகர்வோர்
  2. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் வணிகச்சாத்து
  3. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் பண்டமாற்ற
  4. வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வண்ணம்+ படங்கள்
  5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விரிவு+அடைந்த

ஆங்கல சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

  1. கரன்சிநோட்- பணத்தாள்
  2. பேங்க்- வங்கி
  3. செக்- காசோலை
  4. டிமாண்ட் டிராப்ட்- வரைவோலை
  5. டிஜிட்டல்- மின்னனு மயம்
  6. டெபிட் கார்டு- பற்று அட்டை
  7. கிரெடிட் கார்டு- கடன் அட்டை
  8. ஆன்லைன் ஷாப்பிங்- இணையதள வணிகம்
  9. ஈ காமர்ஸ்- மின்னனு வணிகம்

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...