Pages

Monday, February 15, 2021

மத்திய அரசு

 

மத்திய அரசு (10th)

  • இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு நடுவண் அரசு
  • தலைமையகம் புதுடெல்லி
  • இந்திய அரசியலமைப்பின் பகுதி V ல் 52 முதல் 78 வரையிலான சட்டபிரிவுகள் நடுவண் அரசு பற்றி குறிப்பிடுகின்றன
  • நடுவண் அரசு மூன்று அம்சங்களை கொண்டது(நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை)
  • நிர்வாகம்-> இந்திய குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், பிரதம் அமைச்சர், அமைச்சரவை குழு, இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
  • சட்டமன்றம்(நாடாளுமன்றம்)-> மாநிலங்களவை (ராஜ்ய சபா), மக்களவை (லோக் சபா)
  • மாநிலங்களவை (ராஜ்ய சபா)->238 உறுப்பினர்கள் (இந்தியாவின் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்), 12 உறுப்பினர்கள்(குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டவர்கள்
  • மக்களவை(லோக் சபா)-> 543 உறுப்பினர்கள்(மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்), 2 உறுப்பினர்கள் (குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஆங்கிலோ- இந்தியர்கள்)
  • நீதித்துறை->இந்திய உச்சநீதிமன்றம், இந்திய தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள்

குடியரசு தலைவர்

  • நிர்வாக தலைவர்
  • இந்தியாவின் முதல் குடிமகன்
  • முப்படைகளின் தலைமை தளபதி(53(2) சட்டபிரிவு)
  • சட்டபிரிவு 52ன் படி நேரடியாகவோ அல்லது அலுவலர் மூலமாகவோ அதிகாரங்களாஇ அமல்படுத்துவார்
  • முதல் குடியரசு தலைவர் டாக்டர். இராஜேந்திர பிரசாத்

போட்டியிடுவதற்கான தகுதிகள்

  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
  •  35 வயது பூர்த்தி ஆனவராக இருக்க வேண்டும்
  • அரசு ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்க கூடாது
  • வாக்காளர் குமத்தில் உள்ள 10 வாக்காளர்கள் அவரது  பெயரை முன்மொழியவும், 10 வாக்காளர்கள் வழிமொழியவும் வேண்டும்
  • குடியரசு தலைவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினரகவோ இருக்க கூடாது

அவருடைய இல்லம் மற்றும் அலுவலகம் ஒரே கட்டிடத்தில் உள்ளது(புதுடெல்லி – ராஷ்டிரபதி).

மேலும் இரண்டு இடங்கள் உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை சென்று அலுவலக பணிகளை மேற்கொள்வார்(சிம்லா- ரிட்ரீட் கட்டடம்,ஹைதராபாத- ராஷ்டிரபதி)

குடியரசு தலைவர் ஒற்றை மாற்று வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

குடியரசு தலைவர்க்கு உச்சந்நிதிமன்ற தலைமை நீதிபதி பதவி உறுதி மொழி செய்து வைக்கிறார்

இவரின் பதவி காலம் 5 ஆண்டுகள் (மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உள்ளது)

அதிகாரங்கள்

சட்டபிரிவு 77 ன் படி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் இவரது பெயராலேயே மேற்கொள்ளப்படுகிறது

பதவி நியமணம் செய்கிறார்-> பிரதம அமைச்சர், மற்ற அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இதர நீதிபதிகள், அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமை  கணக்கு தணிக்கையாளர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள், பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், மற்ற உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான தூதர்கள்

பிரதம் அமைச்சரின் ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்

சட்ட மன்ற அதிகாரங்கள்

  • ஆண்டடின் முதல் கூட்டதொடர் இவருடைய உரையுடன் தொடங்குகிறது
  • ஆண்டுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தை கூட்டுகிறார்
  • இவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன
  • இவரின் ஒப்புதல் இல்லாமல் நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது
  • மக்களவையின் ஐந்து ஆண்டு காலம் முடியும் முன்னரே அதனை கலைக்கும் அதிகாரம் உண்டு

நிதி அதிகாரங்கள்

  • இவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியாது
  • இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம்  இவருக்கு உண்டு
  • ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்

நீதி அதிகாரங்கள்

  • சட்டபிரிவு 72ன் படி நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவருக்கு தண்டனையை குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையில் இருந்து விடுவிக்கவும் , மன்னிப்பு வழங்கவும் அதிகாரம் உள்ளது
  • வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசு தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன
  • நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் 352 சட்டபிரிவிலும், மாநில அரசை கலைக்கும் அதிகாரம் 356 வது சட்டப்பிரிவிலும், நிதி நெருக்கடியை அறிவிக்கும் அதிகாரம் 360 வது சட்டபிரிவிலும் உள்ளது
  • கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக 9 முறை குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றுள்ளது

குடியரசு தலைவர் நீக்கம்

  • தன்னுடைய பணித்துறப்பு கடிதத்தினை துணை குடியரசு தலைவரிடம் வழங்கலாம்
  • சட்டபிரிவு 61ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிருபிக்கப்படுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம்(இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்)
  • பதவிக்காலம் முடிந்தாலும் தனக்கு பின்னர் ஒருவர் வரும் வரை அப்பதவியை தொடரலாம்

துணைக் குடியரசு தலைவர்

  • 63வது சட்டபிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை வகிக்கிறார்
  • இப்பதவி அமெரிக்க துணை குடியரசு தலைவர் பதவியை போன்றது
  • முதல் துணை குடியரசு தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன

போட்டியிடுவதற்கான தகுதிகள்

  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
  •  35 வயது பூர்த்தி ஆனவராக இருக்க வேண்டும்
  • அரசு ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்க கூடாது
  • துணை குடியரசு தலைவர்  66(1) சட்டபடி மறைமுக வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
  • இவரின் பதவி காலம் 5 ஆண்டுகள் (மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உள்ளது)
  • புதிய துணை குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையின் துணை தலைவர் துணை குடியரசு தலைவரின் பணிகளை செய்வார்

பதவி நீக்கம்

மக்களவையின் ஒப்புதலுடன், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் பதவி விலக்கலாம். 14 நாட்களுக்கு முன்னரே அவருக்கு அறிவிப்பு வழங்க வேண்டும்

மாநிலங்களவையின் தலைவராக செயல்படுகிறார்

குடியரசு தலைவர் நாட்டில் இல்லாத போதும், அவருக்கு உடல்நிலை சரியில்லாத போதும் இவர் அவரது பணிகளை(அதிகபட்சமாக 6 மாத காலம்) மேற்கொள்வார் 

 குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவ்ர் பதவி ஓரே சமயத்தில் காலியாக இருக்கும் போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிமதி  குடியரசு தலைவர் பதவிகளை செய்வார்(1969- உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிமதி  M.ஹிதயதுல்லா குடியரசு தலைவராக பதவி வகித்தார்)

மாநிலங்களவையின் சட்ட மசோதாவின் வாக்கெடுப்பின் போத் சமநிலையில் இருந்தால் 100 சட்டபிரிவின் படி துணை குடியரசு தலைவர் வாக்கு அளிக்கலாம். அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை

பிரதம அமைச்சர்

  • சட்டபிரிவு 74(1) குடியரசு தலைவருக்கு உதவிட , அறிவுரை வழங்க இவரை தலவராக கொண்ட குழு இருக்கும்
  • இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது வெஸ்மினிஸ்டர் அரசிலமைப்பு சார்ந்தது
  • இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அமைந்துள்ளதால் அவர்களின்  நாடாளுமன்றம் முறை வெஸ்ட்மின்ஸ்டர் முறை எனப்படுகிறது
  • நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்
  • சட்டபிரிவு   78 பிரதம அமைச்சரின் கடமைகளை குறிக்கிறது
  • பிரதம அமைச்சர் குடியரசு தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்
  • நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்
  • சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாக பிரதமர் பங்கு கொள்கிறார்
  • ஒட்டு மொத்த மக்களவை உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினராக (பிரதமர் உட்பட ) இருக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது
  • நடுவண் அமைச்சர்கள்-> காபினெட் (ஆட்சிக்குழு அமைச்சர்கள்), இராசாங்க அமைச்சர்கள், இணை அமைச்சர்கள்
  • காபினெட் (ஆட்சிக்குழு அமைச்சர்கள்)->மூத்த அமைச்சர்களின் முறை சாரா அமைப்பு காபினெட் ஆகும். பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக்கொள்கை, உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகள் எடுக்கிறது
  • இராசாங்க அமைச்சர்கள்-> தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றனர். ஆனால அழைப்பு விடுத்தால் மட்டுமே இவ்ர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்
  • இணை அமைச்சர்கள்-> காபினெட் அமைச்சர்கள் , இராசாங்க அமைச்சர்கள் கடமைகளை செய்ய இவர்கள உதவி செய்கின்றனர்

இந்திய நாடாளுமன்றம்

மத்திய அரசின் சட்டம் இயற்றும் அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது

மூன்று பகுதிகள்-> குடியரசு தலைவர், ராஜ்ய சபா, லோக்சபா

நாடாளுமன்றம் ஈரவை சட்டமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது

   மாநிலங்களவை (ராஜ்ய சபா)(250)->238 உறுப்பினர்கள் (இந்தியாவின் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்), 12 உறுப்பினர்கள்(குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டவர்கள்

உறுப்பினராக தகுதிகள்

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
  • 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்
  • அரசாங்க ஊதியம் பெறும் பதவியில் இருக்க கூடாது
  • மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பி தர முடியாதவரகவோ இருக்க கூடாது
  • மக்களவையிலோ எந்தவொரு சட்டமன்றத்தொலோ உறுப்பினராக இருத்தல் கூடாது

பதவிக்காலம் 6 ஆண்டுகள். 1/3 பங்கு உறுப்பினர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுகின்றனர்

மாநிலங்களவையின் துணை தலைவர் அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

மாநிலங்களவை உறுப்பினர்கள் (மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்MLA )மூலம் மறைமுகமாக(ஒற்றை மாற்று வாக்கு) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

மக்களவை

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 552 உறுப்பினர்கள் கொண்டது.530 (மாநிலங்களில் இருந்து),13 (யூனியன் பிரதேசங்களில் இருந்து), 2(ஆங்கிலோ- இந்தியன்),

 தற்பொழுது 545 உறுப்பினர்களை கொண்டது

மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள்

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
  • 25 வயதுக்கு குறைவாக இருக்க கூடாது
  • அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்
  • அரசாங்க ஊதியம் பெறும் பதவியில் இருக்க கூடாது
  • மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பி தர முடியாதவரகவோ இருக்க கூடாது

பதவிக்காலம்- 5 ஆண்டுகள்

பிரதம அமைச்சரின் அலோசனையின் பேரில் குடியரசு தலைவர் மக்களவையை கலைக்கலாம்

மக்களவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்தவொரு கட்சிக்கோ பெரும்பான்மை இல்லையெனில் மக்களவையை குடியரசு த்லைவர் கலைக்கலாம்

மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதில் “ வயது வந்தோர் வாக்குரிமை” பின்பற்றப்படுகிறது

மக்களவை தேர்தலுக்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்கிறது

மக்களவையின் செயல்பாடுகள்

  • அனைத்து மசோதாக்களை அறிமுகப்படுத்தவும், நிறிவேற்றவும் செய்யமுடியும்
  • குடியரசு தலைவர் , உச்சநீதிமன்றம் நீதிபதிகள் போன்றவர்களின் பதவி நீக்கம் விவகாரங்களில் அதிகாரம் உள்ளது
  • குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது
  • நம்பிக்கையில்லா தீர்மானம் லோக்சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்
  • நிதி மசோதா மக்களவையில் மட்டுமே அறிமுக படுத்த முடியும். இதை 14 நாட்களுக்குள் மாநிலங்களவை ஒப்புதலுடன் சட்டமாக மாறும். ஆனால் மாநிலங்களவையால் நிதி மசோதாவை நிராகரிக்க அதிகாரம் இல்லை
  • தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவை- 18 உறுப்பினர்கள்,  மக்களவை-39 உறுப்பினர்கள்

சபாநாயகர்

  • மக்களவையை தலைமை ஏற்று நடத்துபவர். மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கபடுகிறார்
  • மக்களவை கலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகர் வரும் வரை  இவர் பதவி வகிப்பார்
  •  சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போதும் அல்லது வருகை புரியாத போதும் துணை சபாநாயகர் தலை வகிப்பார்

நாடாளுமன்ற கூட்டு தொடர்

  • பட்ஜெட் கூட்டத் தொடர்- பிப்ரவரி முதல் மே வரை
  • மழை காலக் கூட்டத் தொடர்- ஜீலை முதல் செப்டம்பர் வரை
  • குளிர் கால கூட்டத்தொடர்- நவம்பர் மற்றும் டிசம்பர்

மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றதிற்கே அதிகாரம் உண்டு

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

  • சட்டபிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது
  • நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி. உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும்
  • இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை உண்டு.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்ககூடிய அனைத்து சலுகைகளையும் சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்

நீதித்துறை

குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது

உச்சநீதிமன்றம்

1950 ஜனவரி 28 ஆம் நாள் உச்சநீதிமன்றம் துவங்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தை தொடர்ந்து உருவாக்கப்பட்டது

தொடக்கத்தில் 8 நீதிபதிகள்(தலைமை நீதிபதி உட்பட). தற்பொழுது 34 நீதிபதிகள்(தலைமை நீதிபதி உட்பட).

தகுதிகள்

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்

5 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருக்க வேண்டும்

10 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருக்க வேண்டும்

65 வயது வரை பதவியில் வகிப்பார்

பதவி  விலகல்(குடியரசு தலைவரிடம் கடிதம் கொடுத்து)

பதவி நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது

பணிகள்

தனக்கேயுரிய நீதி வரையறை

உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள்

மேல்முறையீட்டு நீதிவரையறை

உயர் நீதிமன்றங்களின் உரிமையியல், குற்றவியல் , அரசியலமைப்பு வழக்குகள் மேல்முறையீட்டிற்கு செல்லலாம்(சட்ட விளக்கம் தேவையென உயர் நீதி மன்றத்தின் சான்றிதழ் வேண்டும்)

ஆலோசனை நீதிவரையறை

எந்தவொரு சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை பெற குடியரசு தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது

இதர நீதிவரையறை

உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்து பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுபடுத்தும்

நீதிப்புனராய்வு(நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம்)

ஒரு சட்டத்தினை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது

கலைச்சொற்கள்

  1. முடிவுக்கு கொண்டு வருதல்- Terminate
  2. எதிர்பாரா செலவு நிதி- Contingency Fund
  3. பொதுமன்னிப்பு- Pardon
  4. தண்டனை குறைப்பு- Remission
  5. முன்னுரிமை- Precedence
  6. பதவியின் நிமித்தமாக- Ex officio

Book Back

சரியான விடையை தேர்ந்தெடு

  1. நடுவண் அரசின் அரசியலமைப்பு தலைவர் குடியரசு தலைவர் ஆவார்
  2. ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என sabanayakar  தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்
  3. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக  இதற்கு பொறுப்புடையவர்களாவர் மாநிலங்களவை
  4. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது 30 
  5. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர்/ பெற்ற அமைப்பு நாடாளுமன்றம்
  6. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசு தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார் 360
  7. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் குடியரசு தலைவர்

கோடிட்ட இடங்களை நிரப்புக

நிதி  மசோதா குடியரசுதலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது

  

 

 

 

No comments:

Post a Comment