Friday, September 25, 2020

10 th std samacheer kalvi tamil (lesson7 to 9) -new syllabus

  1.  சிற்றக்கல் ஒளி
  2. 1906 –ல் காந்தியடிகள் தென்னப்பிரிக்காவில் சத்தியாகிரக அறப்போரை தொடங்கி வைத்தார்
  3. 1906 – வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்
  4. 1906 ஜூன் 26 ஞானபிரகாசம் பிறந்தார்(சென்னை, ஆயிரம் விளக்கு)
  5. பெற்றோர்- பொன்னுசாமி, சிவகாமி
  6. சரபையர் என்ற முதியவர் இவருக்கு “சிவஞானி” என பெயர் வைத்தார்
  7. பின்னாளில் இது “சிவஞானம்” என பெயர் பெற்றது
  8. மூன்றாம் வகுப்பு வரைபடித்த இவர் கேள்வி ஞானத்தால் பல நூல்கள் படித்தார்
  9. இவரது கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியுர் ஞானியாரடிகளுக்கே மிகுந்த பங்குண்டு
  10. “நானாக முயன்று சேர்த்து வைத்த சொத்து பல்லாயிரக்கணக்கான நூல்களை தவிர வேறு இல்லை “என்று கூறினார்
  11. தமிழா!துள்ளி எழு! என்னும் துண்டறிக்கையை மக்களிடையே வழங்கியதிற்காக சிறையில் அடைக்கப்பட்டார்
  12. 1982  ஆகஸ்டு 8 – “இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானத்தை இந்திய பேராயக்கட்சி நிறைவேற்றியது. இது இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்
  13. விடிதலைக்கு பின்பு மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது
  14. வடக்கெல்லை தமிழ் மக்களை  ஒன்று இணைக்க செய்தவர் மங்கலங்கிழார் தமிழ் ஆசான். இதற்க்காக இவர், ஞானபிரகாசம், விநாயகம், தியாகராஜன், ரஷித் சிறையில் அடைக்கப்பட்டனர்
  15. சித்தூர் ஆந்திராவிடம் கொடுக்கப்பட்டது. பின்பு போராடி திருத்தணி வரையுள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட்டன
  16. சென்னையும் ஆந்திர தலைநகராக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. .ஆனால் இவர்கள் “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.இதன் விளைவாக மத்திய அரசு ஆந்திரா தலைநகர் அதன் எல்லைக்குள்ளேயே அமைக்கப்படும் என்றது
  17. 1953-1954 ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லை பகுதிகளை கேரள(திருவாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்க போராடினார்கள்
  18. 1955 அக்டோபர் 10 பசல் அலி ஆணையம் மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரித்து அமைக்கும் கொள்கை கொண்டு வரப்பட்டது
  19. இந்த கொள்கை மூலமாக மலபார் மாவட்டதை கேரளத்தோடும், திருவாங்கூர், கொச்சி, இராஜியத்திலிருந்த கல்குளம், விளவங்கோடு, தோவளை, அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ் நாட்டோடும் இணைந்தன
  20. புறநானுற்றிலும், சிலப்பதிகாரத்திலும் தமிழ் நாட்டின் வடக்கெல்லையாக வேங்கட மலையும் , தெற்கு எல்லையாக குமரி முனையும் கூறப்பட்டது
  21. 1956 நவம்பர் 1 கன்னியாகுமரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதற்காக போராடிய மார்ஷல் நேசமணிக்கு நாகர்கோவிலில் சிலையும், மணிமண்டபமும் தமிழக அரசு அமைத்துள்ளது
  22. சேர நாட்டு துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையே பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட ஒப்பந்தம் ஆஸ்டிரியா நாட்டு தலைநகர் வியன்னா அருங்காட்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த ஒப்பந்தம் கி.பி.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
  23. மா.பொ.சிவஞானத்தின் “ எனது போராட்டம்” என்னும் சுயவரலாற்று நூலில் இருந்து எடிக்கப்பட்டது. சிலம்புசெல்வர் என்று போற்றப்படுகிறார்
  24. 1952-1954- சட்டமன்ற மேலவை உறுப்பினர்
  25. 1972- 1978- சட்டமன்ற மேலவை தலைவராக பதவி வகித்தார்
  26. தமிழரசு கழகத்தை தொடங்கியவர்
  27. இவர் எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” நூலுக்காக சாகத்திய அகாதெமி விருது 1966 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது
  28. தமிழக அரசு திருத்தணியிலும், சென்னை தியாகராய நகரிலும் இவருக்கு சிலை அமைத்துள்ளது
Book Back
  1. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே திருப்பதியும் திருத்தணியும்
  2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது சிலப்பதிகாரம்

ஏர் புதிதா?

”முதல்மழை விழுந்ததும்

மேல்மண் பதமாகிவிட்டது”

ஏர் புதிதா? எனும் கவிதை கு.ப.ரா படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது

ஆசிரியர்

  1. கு.ப.ராஜகோபாலன்(1902 ல் கும்பகோணத்தில் பிறந்தார்)
  2. சிறப்பு- சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர்
  3. பணி-  தமிழ்நாடு, பாரதமணி, பாரத தேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணி புரிந்தார்
  4. இவரது மறைவுக்கு பின் இவரது படைப்புகள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன

மெய்க்கீர்த்தி

  1. மெய்கீர்த்தி புலவர்களால் எழுதப்பட்டு கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
  2. இரண்டாம் இராசராச சோழனின் மெய்கீர்த்தி பாடமாக வந்துள்ளது
  3. இரண்டாம் இராசராச சோழனின் பட்டங்கள் கோப்பரகேசரி, திருபுவன சக்கரவர்த்தி
  4. முதலாம் இராசராச சோழனின் காலந்தொட்டு மெய்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டுள்ளன
Book Back
1. ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ – என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்? நெறியோடு நின்று காவல் காப்பவர்

சிலப்பதிகாரம்

பொருள்

  1. சுண்ணம்- நறுமணப்பொடி
  2. காருகர்- நெய்பவர்
  3. தூசு- பட்டு
  4. துகிர்- பவளம்
  5. வெறுக்கை- செல்வம்
  6. நொடை- விலை
  7. பாசவர்- வெற்றிலை விற்போர்
  8. ஓசுநர்- எண்ணைய் விற்போர்
  9. மண்ணுள் வினையர்- ஓவியர்
  10. மண்ணீட்டாளர்- சிற்பி
  11. கிழி- துணி

ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு

“சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்

கந்தா  மணிமே கலைபுனைந்தான-நந்தா

வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்

திளையாத குண்டலகே சிக்கும்”…..திருத்தணிகையுலா

உரைபாட்டு மடை

  1. சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை
  2. இது உரைநடைபாங்கில் அமைந்திருக்கும் பாடல்
  3. வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்கு திருப்பி விடுவது மடை
  4. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம்
  5. செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைபாட்டு மடை

நூல்குறிப்பு

  1. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று
  2. சிறப்பு- முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
  3. முவேந்தர் பற்றி கூறுகிறது
  4. 3 காண்டங்களையும்(புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சி காண்டம்),30 காதைகளையும் கொண்டது
  5. கோவலன், கண்ணகி,மாதவி வாழ்க்கையை பாடுவது
  6. சிலப்பதிகாரம்.மணிமேகலை(இரட்டைகாப்பியம்)

ஆசிரியர்

  1. இளங்கோவடிகள்
  2. சேர மரபு
  3. மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலை சாத்தனார்”அடியேன் நீயே அருளுக” என்றார்
  4. “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்”- இளங்கோவடிகள்

மங்கையராய் பிறப்பதற்கே

எம்.எஸ்.சுப்புலட்சுமி

  1. இசை பேரரசி” என எம்.எஸ்.சுப்புலட்சுமியை கூறியவர் நேரு
  2. எம்.எஸ்.சுப்புலட்சுமி- மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி
  3. எம்.எஸ்.சுப்புலட்சுமி கடைசி திரைப்படம் – மீரா
  4. எம்.எஸ்.சுப்புலட்சுமி காந்தியடிகளிடம் “இரகுபதி ராகவ ராஜாராம்” பாடலை பாடினார்
  5. காந்தியடிகளின் விருப்பத்திற்கு இணங்க மீராபஜன் “ஹரிதும் ஹரோ” என்ற பாடலை பாடினார்
  6. எம்.எஸ்.சுப்புலட்சுமி 1954- தாமரையணி விருது பெற்றார்
  7. 1963- இங்கிலாந்திலும், 1966- ஐ.நா அவையிலும் பாடினார்
  8. 1966 திருப்பதியில் வெங்கடேச சுப்ரபாதம் பாடினார்
  9. 1974- நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது பெற்றார்(இவ்விருது பெரும் முதல் இசை  கலைஞர்)
  10. இந்தியாவின் உயரிய விருதான “இந்திய மாமணி “ பட்டம் பெற்றார்
  11. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி,குஜராத்தி  மொழிகளில் பாடியுள்ளார்
  12. “ஒரு பெண் நினைத்தால் முயன்றால் முன்னேறலாம், வெல்லலாம்,  நீங்களும் முயலுங்கள் முன்னேறுங்கள் வெல்லுங்கள்”- எம்.எஸ்.சுப்புலட்சுமி
  13. குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா                           குறையொன்று மில்லை கோவிந்தா”… எம்.எஸ்.சுப்புலட்சுமி

பாலசரஸ்வதி

  1. தாமரை செவ்வணி விருது பெற்றவர்
  2. டோக்கியோவில் உள்ள “கிழக்கு மேற்கு சந்திப்பு” நிகழ்வில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்

ராஜம் கிருஷ்ணன்

  1. வேருக்கு நீர் எனும் புதினத்திற்காக “சாகத்திய அகாதெமி விருது” பெற்றவர்
  2. இவர் எழுதிய புதினங்கள்

  • பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
  • கரிப்பு மணிகள்” (தூத்துக்குடி மக்களின் உப்பள தொழிலாளர்களின் வாழ்க்கை)
  • குறிஞ்சி தேன்” (நீலகிரி, படுகர் மக்களை பற்றியது)
  • அலைவாய்க் கரையில்”(கடலோர மீனவர்களை பற்றியது)
  • சேற்றில் மனிதர்கள்”,”வேருக்கு நீர்”(அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றியது)
  • கூட்டுக் குஞ்சிகள்”(தீப்பெட்டி செய்யும் குழந்தைகள் பற்றியது)
  • மண்ணகத்து பூந்துளிகள்”(பெண்சிசு கொலை)

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

  1. மதுரையின் முதல் பட்டதாரி பெண்
  2. இந்திய அரசின் தாமரைத்திரு விருது பெற்றவர்
  3. சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர்
  4. சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது பெற்றவர்
  5. காந்தியடிகளின் சர்வோதய இயக்கத்தில் களப்பணி ஆற்றினார்
  6. ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றார்
  7.   விடுதலைக்கு பின் கணவருடன் இணைந்து “பூதான இயக்கத்தில்  பணி புரிந்தார்
  8. உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” மூலம் உழவருக்கு வேளாண் இல்லாமல் வேறு பணிகள் மூலம் வருமானம் பெற செய்தார்
  9. ”உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள் உங்களால் எதையும் சாதிக்க இயலும்”- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  10. காந்தியடிகளுடனும்,வினோபாவேயுடனும் பணியாற்றி இன்ன்மும் உழைக்கும் - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

சின்னப்பிள்ளை

  1. எழுத படிக்க தெரியாத சின்னப்பிள்ளை பெண்களை குழுவாக இணைத்து விவசாயம் செய்தார்
  2. மீன்பிடி குத்தகை எடுத்தார்
  3. 2004 சுனாமி வந்த பொழுது தன் குழுவின் மூலம் உதவிகள் செய்தார்
  4. இவர் ஆரம்பித்த  குழு “களஞ்சியம்”இன்று பல மாநிலங்களில் பறவி பல குழுக்கள் உள்ளன
  5. குடியரசு தலைவர் வாஜ்பாய் அவர்களிடம் “பெண் ஆற்றல் விருது” (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) விருது பெற்றார்
  6. தமிழக அரசின் “ஒளவை விருதையும்”,தூர்தர்ஷனின் “பொதிகை விருதையும்” அண்மையில் “தாமரைத்திரு விருதையும்” பெற்றார்       

சங்க இலக்கியத்தில் அறம்

  1.  “கவிதை வாழ்க்கையின் திறனாய்வு”—ஆர்னால்டு
  2. “இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்                                             அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”—புறநானூறு                                   (ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிடுகிறார்)
  3. “அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்”—ஊன் பொதி பசுங்குடையார்
  4. “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும்                                                          காத்தலும் அமைச்சர் கடமை” – மதுரைக்காஞ்சி
  5. “செம்மை சான்ற காவிதி மாக்கள்”—(அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்)
  6. “அறன் அற்க் கண்ட நெறிமான் அவையம்”—புறநானூறு
  7. “எறியார் எறிதல் யாவனது எறிந்தோர்                                                       எதிர்சென்று எறிதலும் செல்லான் “---புறநானூறு(மூலங்கிழார்)                      தன்னை விட வலிமை குறைந்தவரோடு போர் புரியக்கூடாது
  8. “செல்வத்து பயனே ஈதல்                                                                             துய்ப்பேம் எனினே தப்புற பலவே”—புறநானூறு (மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்)                                            ஒரு மனிதன் தன் மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை எண்ணுவது உண்மையான மகிழ்ச்சி
  9. “வழங்குவதற்கு பொருள் உள்ளதா? என்று கூட பார்க்காமல் கொடுக்கும்” பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தனை நக்கீரர் பாராட்டுகிறார்
  10. “உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்” ---ஒளவை
  11. “இரவலர் வராவிட்டாலும் அவர்களை தேடி வரவழைத்தல் ஆடுகோட்ப்பாட்டு சேரலாதனின் இயல்பு “—நச்செள்ளையார்
  12. பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன்”—பரணர்
  13. “தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என குமணன் வருந்தியதாக பெருந்தலை சாத்தனார் கூறுகிறார்
  14. “எல்லாவற்றையும் கொடுப்பவன்" என்று மலையமான் திருமுடிக்காரியை கபிலர் பாராட்டுகிறார்
  15. “பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்”-நல்லந்துவனார்
  16. “உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான்”-நல்வேட்டனார்
  17. “உறவினர் கெட வாழ்பவனின் பொழிவு அழியும் “-பெருங்கடுங்கோ
  18. “செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு”—தமிழ் இலக்கியம்
  19. நிறைவடைகிறவனே செல்வன்”—சீன நாட்டு தாவோயியம்
  20. ”பொய்யாச் செந்நா”,”பொய்படுபறியா வயங்கு செந்நா”-- தமிழ் இலக்கியம்                                                                                                       (வாய்மை பேசும் நாவே உண்மையான நா)
  21. “பிழையா நன்மொழி” என்று வாய்மையை நற்றினை குறிப்பிடுகிறது

போதிதர்மர்

  1. கி.பி.6 ஆம் நூற்றாண்டில் காஞ்சியில் வாழ்ந்தவர்-சிற்றரசர் போதிதர்மர்
  2. இவர் சீனாவிற்க்கு சென்று பெளத்த சமய தத்துவத்தை பரப்பினார்
  3. அதுவே ஜென் தத்துவம்
  4. இவருக்கு சீனர்கள் கோவில் கட்டியுள்ளனர்
Book Back                                                                                                                                          1. மேன்மை தரும் அறம் என்பது கைம்மாறு கருதாமல் அறம் செய்வது. 
2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் அதியன்; பெருஞ்சாத்தன்

ஞானம்

  ஆசிரியர்

  1. தி.சொ.வேணுகோபால்
  2. கோடைவயல்” தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது
  3. திருவையாற்றில் பிறந்தவர்
  4. மணிப்பால் பொறியியல் கல்லூரி பேராசிரியர்(mechanical)
  5. எழுத்து”  கால புது கவிஞர்களில் ஒருவர்
  6. இவரது மற்றொரு கவிதை தொகுப்பு “மீட்சி விண்ணப்பம்
Book Back
1. வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் – இவ்வடி குறிப்பிடுவது இடையறாது அறப்பணி செய்தலை

காலக்கணிதம்

ஆசிரியர்

  1. கண்ணதாசன்
  2. இயற்பெயர் முத்தையா
  3. ஊர்- சிவகங்கை-சிற்றூர்-சிறுகூடல்பட்டியில் பிறந்தார்
  4. பெற்றோர்- சாத்தப்பன் விசாலாட்சி
  5. 1949- “கலங்காதிரு மணமே” பாடலை எழுதி திரை உலகில் பிரபலம் ஆனார்
  6. சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகத்திய அகாதெமி விருது பெற்றவர்
  7. தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்

”கூர்வேல் குவைஇய மொய்ம்பின்

தேர்வண் பாரிதண் பறம்பு நாடே”—புறநானூறு

சிவகங்கை மாவட்டத்தின் பிரான் மலை(பறம்பு மலை)

Book Back

1. காலக் கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்  இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது

ஜெயகாந்தம்

ஜெயகாந்தன் விருதுகள்

  1. குடியரசு தலைவர் விருது(உன்னைப்போல் ஒருவன்)-திரைப்படம்
  2. சாகத்திய அகாதெமி விருது(சில நேரங்களில் சில மனிதர்கள் )- புதினம்
  3. சோவியத் நாட்டு விருது(இமயத்துக்கு அப்பால்)
  4. ஞானபீட விருது
  5. தாமரைத்திரு விருது

சிறுகதை தொகுப்பு

  1. குருபீடம்
  2. யுகசந்தி
  3. ஒரு பிடி சோறு
  4. உண்மை சுடும்
  5. இனிப்பும் கரிப்பும்
  6. தேவன் வருவாரா
  7. புதிய வார்ப்புகள்

குறும்புதினங்கள்

  1. பிரளயம்
  2. கைவிலங்கு
  3. ரிஷிமூலம்
  4. பிரம்ம உபதேசம்
  5. யாருக்காக அழுதான்
  6. கருணையினால் அல்ல
  7. சினிமாவுக்கு போன சித்தாளு

புதினங்கள்

  1. பாரீசுக்கு போ
  2. சுந்தர காண்டம்
  3. உன்னைப் போல் ஒருவன்
  4. கங்கை எங்கே போகிறாள்
  5. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  6. இன்னும் ஒரு பெண்ணின் கதை
  7. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

மொழிப்பெயர்ப்புகள்

  1. வாழ்விக்க வந்த காந்தி(பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்)
  2. ஒரு காதசிரியனின் கதை(முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)

திரைப்படமான படைப்புகள்

  1. சில நேரங்களில் சில மனிதர்கள்
  2. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  3. ஊருக்கு நூறு பேர்
  4. உன்னைப்போல் ஒருவன்
  5. யாருக்காக அழுதான்

சிறுகதை மன்னன் “ என்ற பட்டம் பெற்றவர்

தன்  கதைகளை திரைப்படமாக இயக்கி இருக்கிறார்

சாகத்திய அகாதெமி விருதும், ஞானப்பீட விருதையும் பெற்றவர்

இவரது கதைகள் பிறமொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன

சித்தாளு

ஆசிரியர்

  1. நாகூர்ருமி
  2. இயற்பெயர்- முகமதுரஃபி
  3. தஞ்சை மாவட்டம்
  4. 1980-கணையாழி இதழ்களில் எழுத தொடங்கினார்
  5. கவிதை தொகுதிகள்- நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல்
  6. மொழிப்பெயர்ப்பு கவிதைகளும், சிறுகதை தொகுதிகளும், நாவல்களையும்(கப்பலுக்கு போன மச்சான்) படைத்துள்ளார்
Book Back
1. ‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ – இவ்வடிகளில் கற்காலம் என்பது  தலையில் கல் சுமப்பது

தேம்பாவணி

  1. கிறித்துவுக்கு முன் தோன்றியவர்(திருமுழக்கு யோவான்) அருளப்பன்
  2. இவருக்கு வீரமாமுனிவர் கருணையன் என்று பெயரிட்டுள்ளார்
  3. கருணையனின் தாயார் எலிசபெத் கானகத்தில் வாழ்ந்தார்
  4. எலிசபெத் இறப்பிற்கு பின் யோவானின் துயரமே  இந்த பாடல்

பொருள்

  1. சேக்கை- படுக்கை
  2. யாக்கை- உடல்
  3. பிணித்து- கட்டி
  4. வாய்ந்த- பயனுள்ள
  5. இளங்கூழ்- இளம்பயிர்
  6. தயங்கி- அசைந்து
  7. காய்ந்தேன் – வருந்தினேன்
  8. கொம்பு – கிளை
  9. புழை- துளை
  10. கான் – காடு
  11. தேம்ப- வாட
  12. அசும்பு- நிலம்
  13. உய்முறை- வாழும்வழி
  14. ஓர்ந்து- நினைத்து
  15. கடிந்து- விலக்கி
  16. உவமணி- மணமலர்
  17. படலை- மாலை
  18. துணர்- மலர்கள்

தேம்பா+அணி-  வாடாதமாலை

தேன்+பா+அணி- தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு

கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான சூசையப்பர் என்னும் யோசேப்பின்(வளனை) பாட்டுடைத்தலைவராக கொண்டது

3 காண்டங்களையும், 36 படலங்களையும், 3615 பாடல்களையும் கொண்டது

17 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது

ஆசிரியர்

  1. வீரமாமுனிவர்
  2. இயற்பெயர்- கான்சுடான்சு ஜோசப் பெசுகி
  3. நூல்கள்- சதுரகராதி(தமிழின் முதல் அகராதி), தொன்னுல் விளக்கம், சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்த குருகதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள்
  4. சிறப்பு- வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னனை சந்திப்பதற்காக 2 மாதத்தில் உருது மொழியை கற்றார். அதனால் இவருக்கு அம்மனர் இஸ்மத் சன்னியாசி(தூய துறவி) என்னும் பட்டம் வழங்கினார்
  5. Book Back
  6. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று கருணையன்,எலிசபெத்துக்காக வேண்டினார்.

ஒருவன் இருக்கிறான்

  1. ஒருவன் இருக்கிறான் சிறுகதை கு.அழகிரிசாமி சிறுகதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
  2. இவர் அரசு பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துபணியை மேற்கொண்டார்
  3. கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர்
  4. மலேசியாவில் படைப்பாளர்களுக்கு படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர்

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து

அரசு பட அமர் உழக்கி” – மதுரைக்காஞ்சி

(திருவாரூர் மாவட்டத்தின் ஆலங்கானம்)

Thursday, September 10, 2020

10 th std samacheer kalvi tamil (lesson4 to 6) -new syllabus

 செயற்கை நுண்ணறிவு

  1. 1980 தனிநபர் கணிணி வளர்ச்சி
  2. Natural language generation software(இயல்பான மொழிநடையை உருவாக்குதல்) இதற்கு வேர்டுஸ்மித் (எழுத்தாளி) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்
  3. தகவல் கொடுத்தால் போதும் வேர்டுஸ்மித் அழகான கட்டுரையை சில நொடிகளில் உருவாக்கிவிடும்
  4. செயற்கை நுண்ணறிவு என்பது ஓரு மென்பொருள் அல்லது கணிணி செயல்திட்ட வரைவு(computer program) எனலாம்
  5. செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்துக்கொள்ளவும் முடியும்.
  6. மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு
  7. ”இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்”  - பாரதியார்
  8. கானொலிகளை தொகுக்கும் மென்பொருள்களில் (video editing) இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.இதன் மூலம் நேரம் வீணாவது தவிக்கப்படுகிறது
  9. இந்தியாவின் பெரிய வங்கி ஆகிய state bank of india (ELA-ELECTRONIC LIVE ASSISTANT) என்னும் உரையாடு மென்பொருளை(chatbot) உருவாக்கியிருகிறது
  10. 1விநாடிக்கு 10,000  வாடிக்கையாளர்களுடன் உரையாடும்
  11. செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் தரவு அறிவியலாளர்களின்(data scientists) இயந்திர கற்றல் வல்லுநர்கள் முதலான பல தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவையும் பெருகி வருகிறது
  12. கல்வி அறிவுடன் மின்னனு கல்வியறிவையும் (digital literacy) மின்னனு சந்தைப்படுத்துதலையும் (digital marketing)அறிந்து இருப்பது வணிகத்துல் வெற்றியடைய உதவுகிறது
  13. 2016 ஆம் ஆண்டு IBM நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணிணி (வாட்சன்) சில நிமிடங்களில் இரண்டு கோடி தரவுகளை அலசி நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுப்பிடித்தது
  14. சினாவில் 50க்கும் மேற்ப்பட்ட மருத்துவமனைகள் இயந்திர மனிதர்களை பணிக்கு அமர்த்தியுள்ளன
  15. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர் (மூன்று வகை ரோப்போக்கள் வீட்டுக்கு, வணிகத்துக்கு,படிப்புக்கு)
  16. சீன நாட்டில் காண்டன் நகருக்கு 500 கல் வடக்கே சூவன்செள என்னும் துறைமுக நகர் உள்ளது.அக்காலத்தில் தமிழர்கள் வணிகம் செய்தனர்.எனவே சிவன் கோயில் கட்டப்பட்டது.(சீன பேரரசரான (குப்லாய்சான்).சோழர்கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  17. Book Back
  18. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது? இலா

பெருமாள் திருமொழி

பொருள்

  1. சுடினும்- சுட்டாலும்,மாளாத- தீராத
  2. மாயம் – விளையாட்டு

notes

  1. வித்துவக்கோடு என்னும் ஊர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது
  2. குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப்பாடுகிறார்
  3. பெருமாள் திருமொழி நாலாயிர திவ்விய பிரப்ந்தத்தில் 5 ஆம் திருமொழியாக உள்ளது
  4. 105 பாடல்கள் உள்ளன.
  5. இதனை பாடியவர் குலசேகராழ்வார்
  6. காலம் 8 ஆம் நூற்றாண்டு
  7. குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழியில் உவமை அணி பயின்று வந்துள்ளது
Book Back
1. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது? இறைவனிடம் குலசேகராழ்வார்

பரிபாடல்

பொருள்

  1. விசும்பு _ வானம்
  2.  ஊழி _ யகம்  - ஊழ _ முறை 
  3. தண்பெயல் _ குளிர்ந்த மழை
  4. ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கி கிடந்த
  5. பீடு- சிறப்பு
  6. ஈண்டி – செறிந்து திரண்டு

இலக்கணக்குறிப்பு

  1. ஊழ் ஊழ் – அடுக்குத்தொடர்
  2. வளர்வானம் – வினைத்தொகை
  3. செந்தீ-   பண்புத்தொகை
  4. வாரர் – ஈறுகெட்ட எதிர் மறை பெயரெச்சம்

notes

  1. அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள்  உள்ளன என நிருபித்தார்
  2. 1300 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இதை கூறி இருக்கிறார்                                                                                                           “அண்ட பகுதியின் உண்டைப் பிறக்கம்                                                               சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”
  3. பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
  4. “விசும்பில் ஊழி ஊழ் செல்லக்  ………” – கீரந்தையார்
  5. ஓங்கு பரிபாடல் என்னும் புகழுடையது
  6. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூலாகும்
  7. உரையாசிரியர்கள் இதில் 70 பாடல்கள் உள்ளதாக கூறியுள்ளனர்.ஆனால் 24 பாடல்களே கிடைத்துள்ளன
  8. 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின்  வாழ்க்கை முறை,சமூக உறவு, அறிவாற்றல் இயற்கையை புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை சங்க இலக்கியம் மூலம் அறியலாம்

விண்ணை தாண்டிய தன்னம்பிக்கை

  1. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
  2. 10 காட்சி கூடங்கள் உள்ளன
  3. பரிணாம வளர்ச்சி பூங்கா , புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா, இயந்திரவியல் பூங்கா உள்ளன
  4. இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை இங்கு தான் உள்ளது
  5. 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த கோளரங்கம்
  6. மாற்றத்திற்க்கு ஏற்பத் தகவமைத்துக்                                                            கொள்ளும் திறனே புத்திகூர்மை”—ஸ்டீபன் ஹாக்கிங்
  7. “அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல.அது அறிவின் மாயையே” - ஸ்டீபன் ஹாக்கிங்
  8. தற்கால ஐன்ஸ்டைன் ஸ்டீபன் ஹாக்கிங்
  9. ஸ்டீபன் ஹாக்கிங் ஆராய்ச்சி முடிவு “ஹாக்கிங் கதிர்வீச்சு” என்று அழைக்கப்படுகிறது
  10. ஐன்ஸ்டைன்,நியுட்டன் ஸ்டீபன் ஹாக்கிங் கின் முன்னோடிகள்
  11. நியூட்டன் -> கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ->கணக்கியல் துறையின் “லூகாசியன் பேராசிரியர்” என்ற மதிப்பு மிக்க பதவி வகித்தார்
  12. ஸ்டீபன் ஹாக்கிங் கும் அதே பதவி வகித்திருக்கிறார்
  13. ஐன்ஸ்டன் ஈர்பலைகள் கோட்பாடு E=MC2
  14. ஸ்டீபன் ஹாக்கிங் கோட்பாடாக வெளியிடாமல் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டார். பொதுமக்களுக்கும் புரியும் வண்ணம் இருந்தது
  15. ஸ்டீபன் ஹாக்கிங் விருதுகள்                                                                   1.அமெரிக்கவின் உயரிய விருது அதிபர் விருது(presidential medal of freedom)       2. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது                                                                                         3.உல்ஃப் விருது(wolf foundation prize)                                                                                 4.காப்ளி பதக்கம்(Copley medal)                                                                                        5.அடிப்படை இயற்பியல் பரிசு(fundamental physics prize)
  16. 2012->பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தொடக்க விழா  நாயகர் என்ற சிறப்பை பெற்றார்
  17. அடுத்த தலைமுறை (The next generation),பெருவெடிப்பு கொள்கை (The bigbang theory) உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்றார்
  18. தனது 60 வது பிறந்த நாளை சூடான காற்று நிரம்பிய பலூனில் பறந்து கொண்டாடினார்
  19. போயிங் 727 என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்
  20. அறிவியல் உலகில் மட்டுமின்றி சமூக உளவியல் அடிப்படையிலும் தன்ன்ம்பிக்கையின் சிகரமாக விளங்கினார் ஸ்டீபன் ஹாக்கிங்
  21. அறிவுத் தேடலில் உடலில் உள்ள தடைகளை தகிர்த்த மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங்
  22. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய “காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற நூல் 40 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
  23. 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை பற்றி கூறியுள்ளார்
  24. ஒரு  கோடி படிகளுக்கு மேல் விற்பனையானது
  25. இப்பேரண்டம் பெருவெடிப்புக் கொள்கை மூலம் உருவானது என்பதை கணிதத்தின் மூலமாக விளக்கினார்
  26. கடவுள் ஒன்று இல்லை என்று கூறினார்
  27. ஜான்வீலர் என்பவர் தான் முதன் முதலில் கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் குறிப்பிட்டார்
  28. ஸ்டீபன் ஹாக்கிங்-கலிலியோ வின் நினைவு நாளில் பிறந்தார்
  29. ஸ்டீபன் ஹாக்கிங்- ஐன்ஸ்டைனின் பிறந்த  நாளில் மறைந்தார்
  30. “தலவிதி தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என நம்புபவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு வ்ருகிறது” ஸ்டீபன் ஹாக்கிங்
  31. ”கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை                                                                 திரு மா வியல் நகர்க் கருவூர் முந்துறை” அகநானூறு                                             (கரூர் மாவட்டத்தின் கருவூர்(கரூர்)

  மொழிபெயர்ப்பு கல்வி

  1. “ஒரு மொழியில் உண்ர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு “ மணவை முஸ்தபா
  2. “உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்க்கும் மொழிப்பெயர்ப்பும் ஒரு காரணமாகும்” மு.கு.ஜகந்நாதர்
  3. “மொழிப்பெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்”
  4. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் ,மதுராபுரிச் சங்கம் வைத்தும்” – சின்னமனூர் செப்பேட்டு குறிப்பு
  5. வில்லிபாரதம், சிவகசிந்தாமணி,கம்பராமயணம் வடமொழி கதைகளை தழுவி படைக்கப்பட்டவை
  6. ஆங்கிலேய ஆட்சியில்  மொழிப்பெயர்ப்பு சாகத்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம்(NBT),தென்னிந்திய புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.
  7. ஜப்பான் (மொகு சாஸ்டு) என்பதன் பொருள் விடைத்தர அவகாசம் வேண்டும்
  8. ஜெர்மன் மொழியில் மொழிப்பெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர் . அந்நாட்டு படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்
  9. 18ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல  மொழிப்பெயர்க்கப்பட்டன
  10. ஆங்கிலேய வருகைக்கு பின் ஆங்கில நூல்களும் பிற ஐரோப்பிய நூல்களும் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டன
  11. தமிழ் நூல்களும் பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டன (திருக்குறள்)
  12. ரவிந்திரநாத் தாகூர் தன் கவிதை தொகுப்பான கீதாஞ்சலியை தானே ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது
  13. ஒரு நாட்டின் மொழிப்பெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையை கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும், அறிவையும் மதிப்பிடுவார்கள்
  14. ஜெர்மனியில் ஒர்  ஆண்டில் பிற மொழிகளில் இருந்து 5000 நூல்கள் வரை மொழிப்பெயர்க்கப்படுகின்றன
  15. தமிழ் நூல்கள் அதிகமாக பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படுகின்றன (முதலில் ஆங்கிலம்,பின்பு மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்ய மொழி, வங்காளம், மராத்தி)
  16. சாகித்திய அகாதெமி நிறுவனமும், தேசிய புத்தக நிறுவனமும் பல மொழிகளில் இருந்து நல்ல படைப்புகளை எல்லா இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்த்துள்ளனர்
  17. “”காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்                                          கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி                                                           பேசி மகிழ் நிலை வேண்டும்”—குலோத்துங்கன்
  18. “சென்றீடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” - - பாரதி
  19. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”—பாரதி
  20. ராகுல் சாங்கிருத்யாயன் 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையில் இருந்து பொழுது “ வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை எழுதினார்
    1949- இந்நூலை கணமுத்தையா தமிழில் மொழிப்பெயர்த்தார்
    2016- Dr.N.ஸ்ரீதர் மொழிப்பெயர்ப்பு
    2016- முத்து மீனாட்சி மொழிப்பெயர்ப்பு
     2018- யூமா வாசுகி மொழிப்பெயர்ப்பு

 பிரான்சு தேசிய நூற்கூடத்தில் (Biliothque nationale) ஏறக்குறைய 1000 பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன.இந்தியாவில் இல்லாதவை கூட இங்கு இருக்கின்றன(இன்னும் அச்சிடப்படாத “ மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்,சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்)

  1. Rail sleeper- தொடர்வண்டியின் தண்டவாளத்தில் உள்ள குறுக்குகட்டை
  2. Camel- வடம்(கயிறு),ஒட்டகம்
  3. Underground drainage- புதைசாக்கடை
  4.  Tele- தொலை
  5. Telegraph- தொலைvஅரி
  6. Television- தொலைக்காட்சி
  7. Telephone- தொலைபேசி
  8. Telescope- தொலைநோக்கி
  9. Telemetry- தொலைஅளவியல்
  10. Transcribe-படியெடுத்தல்
  11. Transfer- மாறுதல்    
  12. Transform- உருமாற்றுதல்
  13. Transact- செயல்படுத்துதல்

பாரதியின் மொழிப்பெயர்ப்பு

  1. Exhibition- காட்சி,பொருட்காட்சி
  2. East indian railways- இருப்புப் பாதை
  3. Revolution- புரட்சி
  4. Strike- வேலை நிறுத்தம், தொழில் நிறுத்தம்
Book Back
1.‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி  சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

நிதிவெண்பா

பொருள்

  1. திருத்தி- சீராக்கி
  2. மருளை- மயக்கம்
  3. தெருளை – தெளிவு

ஆசிரியர் குறிப்பு

  1. சதவதானத்தில் சிறத்து விளங்கிய செய்குதம்பி பாவலர்
  2. சதவதானம்-(ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே ஆகும்)
  3. காலம்- 1874-1950
  4. ஊர்- கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊர்
  5. சிறப்பு- 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றார்
  6.  சிறாபுராணத்திற்க்கு உரை எழுதியுள்ளார்
  7. (1970 மார்ச் 10 – சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவனி” என்று பாராட்டப் பெற்றார்
  8. இவரது நினைவில் இடலாக்குடியில் மணிமண்டபமும், பள்ளியிம் உள்ளது
  9. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
Book Back
1. அருந்துணை என்பதைப் பிரித்தால் அருமை + துணை
2. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
– என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது? கல்வி

திருவிளையாடற் புராணம்

  1. அரசுக்குறிய முரசு கட்டிலில் கண்ணயட்ந்தார் – மோசிகீரனார்
  2. கவரி விசிய மன்னன் – பெருஞ்சேரல் இரும்பொறை
  3. மாசற வசித்த வார்புறு வள்பின்” என்று பா மழை பொழிந்தார் மோசிகீரனார்
  4. திருவிளையாடற் புராணம் சிலப்பதிகாரம் காலம் தொட்டு இயற்றப்பட்டு வந்தாலும் பரஞ்ஜோதி முனிவர் இயற்றியதே சிறப்பு
  5. இந்நூல் காண்டங்களை கொண்டது(மதுரைக்காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய் காண்டம்), 64 படலங்கள் கொண்டது
  6. பரஞ்ஜோதி முனிவர் திருமறைக்காட்டில் வேதாரண்யத்தில் பிறந்தார்(17 ஆம் நூற்றாண்டு)
  7. பரஞ்ஜோதி முனிவர் சிவபக்தி மிக்கவர்
  8. நூல்கள்- வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றி கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி
Book Back
1. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் மன்னன்  இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் இறைவன்

 

புதிய நம்பிக்கை

  1. அமெரிக்க கறுப்பின பெண்மணி “ மேரி மெக்ஸியோட்அ பெத்யூன்” இவரின் வாழ்க்கையே “உனக்கு படிக்க தெரியாது” என்ற தலைப்பில் நூலாக படைத்துள்ளார்
  2. கமலாலயன் – இயற்பெயர் ( வே.குணசேகரன்)
  3. வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்

நிகழ்கலை

கரகாட்டம்

  1. பித்தளை சொம்பு அல்லது சிறிய குடத்தை தலையில் வைத்து மண் அல்லது பச்சரிசி நிறப்பி நடுவில் கிளி பொம்மை வைத்துஆடுவது
  2. “நீரற வறியாக் கரகத்து”- புறநானூறு
  3. சிலப்பதிகாரத்தில்  மாதவி  ஆடிய 11 வகை ஆடலில் குடக்கூத்து ஒன்று . இதுவே கரகாட்டத்திற்க்கு அடிப்படை
  4. தமிழகத்தில் மதுரை,திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

மயிலாட்டம்

  1. நையாண்டி மேளம் இசைக்க மயில் வடிவில் உள்ள கூட்டுக்குள் உருவர் ஆடுவது
  2. இது கரகாட்டத்தின் துனையாட்டமாகும்

காவடியாட்டம்

  1. கா- பாரம்தாங்கும் கோல்
  2. காவடியின் அமைப்புக்கு ஏற்ப மச்சக்காவடி,சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்காவடி, பறவைக்காவடி என்று அவற்றை அழைக்கின்றனர்
  3. இலங்கை. மலேசியா உட்பட தமிழர்கள் வாழும் பிற நாடுகளிலும் காவடி ஆடப்படுகிறது

ஒயிலாட்டம்

  1. பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதெ வழக்கில் உள்ளது
  2. ஒரே குழுவில் வயது முதிர்ந்தவர்களும் இளையர்களும் இணைந்து ஆடுவதும் உண்டு
  3. இந்த ஆட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம்,தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன

தேவராட்டம்

  1. வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் என்று பொருள் கொள்ளப்படுகிறது
  2. ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது
  3. உறுமி என்று அழைக்கப்படும்
  4. தேவதுந்துபி இந்த ஆட்டத்திற்க்குரிய இசைக்கருவி
  5. 8 -13 கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்

சேர்வையாட்டம்

ஆட்டக்கலைஞர்கள் சேவைபலகை, சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைத்து கொண்டே ஆடுகின்றனர்

பொய்க்கால் குதிரையாட்டம்

  1. போல செய்தல் பின்பற்றி நிகழ்த்தி காட்டும் கலைகளில் இதுவும் ஒன்று
  2. காலில் கட்டை கட்டி குதிரை போன்று கூட்டை உடம்பில் அணிந்து அரசன், அரசி போன்று வேடம் இட்டு ஆடுவது
  3. இது மராட்டியர் காலத்தில் தமிழகத்திற்க்கு வந்ததாக கூறப்படுகிறது
  4. இதற்கு பாடல்கள் இல்லை. நையாண்டி மேளமும், நாதசுரமும் இசைக்கப்படுகின்றன
  5. இராஜஸ்தானில் கச்சிக்கொடி என்றும், கேரளத்தில் குதிரைக்கிளி என்றும் அழைக்கப்படுகிறது

தப்பு ஆட்டம்

  1. தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள தோற்கருவி
  2. தப்பு இசைத்து கொண்டே இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்
  3. இவ்வாட்டம் தப்பாட்டம்,தப்பட்டை,தப்பு என்று அழைக்கப்படுகிறது
  4. கோவில் திருவிழா,திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சியில் ஆடப்படுகிறது
  5. இதனை  பறை என்றும் அழைப்பர்

”தகக தகதகக தந்தத்த  தந்தகக

 என்று தாளம்

 பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக” – திருப்புகழ்(அருணகிரிநாதர்)

புலி ஆட்டம்

  1. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலை
  2. பாட்டும் வசனமும் இல்லை
  3. தப்பு மேளத்திற்கு ஏற்ப ஒருவரோ அல்லது இருவரோ ஆடுவர்

தெருக்கூத்து

  1. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்படும் கலை
  2. இதில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்
  3. திரெளபதி அம்மன் வழிப்பாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது
  4. அருச்சுனன் தபசு என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படும் கூத்து
  5. இதனை கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன

தோற்பாவைக்கூத்து

  1. தோலால் ஆன பாவையை கொண்டு நிகழ்த்தும் கலை
  2. தோலில் செய்த வரைப்படங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி கதைக்கேற்ப மேலும், கீழும், பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி உரையாடியும் பாடியும் காட்டுவது
  3. இதில் இசை, ஒவியம், நடனம், நாடகம். பலக்குரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன
  4. சங்ககாலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை பாவை பற்றின குறிப்பு தமிழ் இலக்கியங்களில் உள்ளது
  5. திருக்குறளில் மரப்பாவை பற்றிய குறிப்பு உள்ளது
  6. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக்கூத்து இடம் பெற்றுள்ளன
  7.   தோற்பாவைக்கூத்து கையுறைப்பாவைக்கூத்து . பொம்மலாட்டம் என்பனவாக மாற்றம் பெற்றுள்ளது

ஆசிரியர்

  1. கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு
  2. நாடக கலையை மீட்டெடுப்பதே  தமது குறிக்கோளாக கருதினார்
  3. தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக்கினார்
  4. இந்திய அரசின் தாமரைத்திரு  விருதையும், தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்
  5. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில் “இராச சோழன் தெரு”  என்பது இன்றும் உள்ளது
Book Back
1. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
2. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

பூத்தொடுத்தல்

”இந்த பூவை தொடுப்பது எப்படி?........”

ஆசிரியர்

  1. கவிஞர் உமாமகேஸ்வரி-மதுரை மாவட்டம்
  2. கவிதை, சிறுகதை, புதினம் என பல படைத்துள்ளார்
Book Back
1. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?தளரப் பிணைத்தால்

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

பொருள்

  1. பண்டி-வயிறு
  2. அசும்பிய – ஒளிவிசுகிற
  3. முச்சி- தலையுச்சிக்கொண்டை

செங்கீரைப்பருவம்

செங்கீரை காற்றில் ஆடுவது போன்று 5-6 மாதங்களில் குழந்தையின் தலை மென்மையாக ஆடும்

ஆசிரியர்

  1. குமரகுருபரர்
  2. காலம்- 17 ஆம் நூற்றாண்டு
  3. அறிந்த மொழிகள்- தமிழ், வடமொழி, இந்துஸ்தானி
  4. நூல்கள்- கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலா  வல்லிமாலை, நிதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று

பிள்ளைத்தமிழ் -இறைவனையோ,தலைவனையோ, அரசனையோ பாட்டுடை  தலைவராக கொண்டு அவரை குழந்தையாக கருதி பாடுவர்

பத்து பருவங்கள், பருவத்திற்க்கு பத்து பாடல்கள் என 100 பாடல்கள் கொண்டது

ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகை உண்டு

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு,செங்கீரை, தால், சப்பானி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

பெண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு,செங்கீரை, தால், சப்பானி, முத்தம், வருகை, அம்புலி,கழங்கு, அம்மானை, ஊசல்

கம்பராமாயணம்

ஆசிரியர்

  1. கம்பர்
  2. இந்நூலுக்கு “இராமவதாரம்” என பெயர் இட்டார்
  3. 6 காண்டங்களை உடையது
  4. புகழ்- கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுகட்டுத்தறியும் கவிபாடும் , விருத்தம் என்னும் ஒண்பாவிற்க்கு உயர் கம்பன்
  5. ஊர்- சோழநாடு- திருவழந்தூர்
  6. சிறப்பு- திருவெண்ணைய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்
  7. நூல்கள்- சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏர் எழுபது, சிலை எழுபது
Book Back
1. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன? அங்கு வறுமை இல்லாததால்

பாயச்சல்

நூல்குறிப்பு

“தக்கையின் மீது நான்கு கண்கள்” சிறுகதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது

ஆசிரியர்

  1. சா.கந்தசாமி
  2. மயிலாடுதுறை நாகப்பட்டின மாவட்டம்
  3. சாயாவனம்- புதினம் மூலம் புகழ் பெற்றார்
  4. விசாரனை கமிஷன் புதினம்(சாகத்திய அகாதெமி விருது)
  5. சுடுமண் சிலைகள் குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்
  6. 150 மேற்ப்பட்ட  சிறுகதைகள்(தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி),11 மேற்ப்பட்ட புதினங்கள் எழுதியுள்ளார்
  7. “ஓங்கு இரும் பரப்பின்                                                                                                               வங்க ஈட்டத்து தொண்டியோர்”—சிலப்பதிகாரம்                         (இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி)

Thursday, September 3, 2020

10 சமச்சீர்கல்வி பாடம் 1 இலக்கணம்-2019 syllabus

10 th std samacheer kalvi tamil part 3(இலக்கணம்) -new syllabus

https://tnpscstudymaterialeasy.blogspot.com/p/welcome-page.html

 புறப்பொருள் இலக்கணம்

புறத்திணை

புறம் பற்றிய நெறிகளை கூறுவது புறத்திணை

புறத்திணை 12 வகைப்படும்

     1. வெட்சித்திணை

ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளை (மாடுகளை) கவர்ந்து வர வெட்சி பூவினை சூடிக்கொண்டு சென்று ஆநிரை கவர்தல் வெட்சித்திணை ஆகும்

      2. கரந்தைத் திணை

வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை கரந்தை பூவை சூடி சென்று மீட்ப்பது கரந்தைத் திணை

      3.வஞ்சித் திணை

மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டை கைப்பற்ற கருதி வஞ்சி பூவை சூடிப் போருக்கு செல்வது  வஞ்சித் திணை

       4.காஞ்சித் திணை

தன் நாட்டை கைப்பற்ற வந்த  மாற்றரசனோடு ,காஞ்சிப் பூவை சூடி எதிர்த்து  போரிடல் காஞ்சித் திணை

       5.நொச்சித் திணை

கோட்டையை காத்தல் வேண்டி உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சி பூவை போரிடுவது நொச்சித் திணை

       6.உழிஞைத் திணை

மாற்றரசனின் கோட்டையை கைப்பற்ற உழிஞை பூவை சூடிய தன் வீரர்களுடன் அதனை சுற்றி வளைத்தல் உழிஞைத் திணை

      7.தும்பைத் திணை

பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட தம் வீரர்களுடன் தும்பை பூவை சூடி  போர்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது  தும்பைத் திணை

      8.வாகைத் திணை

போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச்சூடி மகிழ்வது வாகைத் திணை

      9. பாடாண் திணை

பாடுவதற்கு தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ்,  கருணை முதலியவற்றை போற்றி பாடுவது பாடாண் திணை

     10.பொதுவியல் திணை

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும்,அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை

      11.கைக்கிளை

கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்

      12.பெருந்திணை

பெருந்திணை பொருந்தா காமம்

 கலைச்சொல்

  1. Consulate –துணைத்தூதரகம்
  2. Patent –காப்புரிமை
  3. Document –ஆவணம்
  4. Guild –வணிகக் குழு
  5. Irrigation – பாசனம்
  6. Territory – நிலப்பகுதி

பா- வகை,அலகிடுதல்

           யாப்பு

            எழுத்து, அசை, சீர், தலை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளை கொண்டது யாப்பு

           ஓசையின் வகைகள்

  1.             செப்பல் ஓசை
  2.              அகவல் ஓசை
  3.              துள்ளல் ஓசை
  4.              தூங்கல் ஓசை   

           செப்பல் ஓசை

செப்பலோசை வெண்பாவிற்குரியது

குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளது

           அகவல் ஓசை

அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது

சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்கள் அகவற்பாவில் அமைந்தவை

            துள்ளல் ஓசை

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை

இது கலிப்பாவிற்க்கு உரியது

தூங்கல் ஓசை

தூங்கல் ஓசை வஞ்சிப்பாவிற்க்கு உரியது

வெண்பா

  1. குறள் வெண்பா
  2. சிந்தியல் வெண்பா
  3. நேரிசை வெண்பா
  4. இன்னிசை வெண்பா
  5. பஃறொடை வெண்பா

ஆசிரியப்பா

  1. நேரிசை ஆசிரியப்பா
  2. இணைக்குறள் ஆசிரியப்பா
  3. நிலை மண்டில ஆசிரியப்பா
  4. அடி மறி மண்டில ஆசிரியப்பா

வெண்பாவின் பொது இலக்கணம்

  1. செப்பல் ஓசை பெற்று வரும்
  2. ஈற்றடி முச்சீராகவும்,ஏனைய அடிகள் நாற்சீரகவும் வரும்
  3. இயற்சீர் , வெண்சீர் மட்டுமே பயின்று வரும்
  4. இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வரும்
  5. இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்(கலிவெண்பா 13 அடி மேல் வரும்)
  6. ஈற்றுச்சீர் நாள்,மலர், காசு, பிறப்பு என்னும்  வாய்பாட்டில் வரும்

ஆசிரியப்பா பொது இலக்கணம்

  1. அகவல் ஓசை பெற்று வரும்
  2. ஈரசைச்சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்
  3. ஆசிரியத்தளை மிகுதியாகவும் ,வெண்டளை கலித்தளை ஆகியவை விரவியும் வரும்
  4. மூன்ற அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்
  5. ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு

குறள் வெண்பா

  1. வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும்
  2. இரண்டு அடிக்ளாய் வரும்
  3. முதல் அடி நான்கு சீராகவும்(அளவடி),இரண்டாம் அடி மூன்று சீராகவும்(சிந்தடி) வரும்

அலகிடுதல்

சீரை பிரித்து அசை பார்த்து அசைக்கேற்ற வாய்பாடு காணுதல்

ஓரசைச்சீர்

  1. நேர்-நாள்
  2. நிரை-மலர்
  3. நேர்பு-காசு
  4. நிரைபு- பிறப்பு

ஈரசைச்சீர்

  1. நேர் நேர்- தேமா
  2. நிரை நேர் – புளிமா
  3. நிரை நிரை- கருவிளம்
  4. நேர் நிரை-கூவிளம்

மூவசைச்சீர்

  1. நேர் நேர் நேர் - தேமாங்காய்
  2. நிரை நேர் நேர் – புளிமாங்காய்
  3. நிரை நிரை நேர் - கருவிளங்காய்
  4. நேர் நிரை நேர் -கூவிளங்காய்
  5. நேர் நேர் நிரை - தேமாங்கனி
  6. நிரை நேர் நிரை – புளிமாங்கனி
  7. நிரை நிரை நிரை - கருவிளங்கனி
  8. நேர் நிரை நிரை –கூவிளங்கனி

யாப்பதிகாரம்(புலவர் குழந்தை)

  1. செப்பலோசை- இருவர் உரையாடுவது போன்ற ஓசை
  2. அகவலோசை – சொற்பொழிவாற்றுவது(ஒருவர் பேசுதல்)போன்றது
  3. துள்ளலோசை – கன்று துள்ளினாற் போல சீர்தோறும் துள்ளி வரும்
  4. தூங்களோசை- சீர்தோறும் துள்ளாது தூங்கியே(தாழ்ந்தே) வரும்

Book back

பாவகைகள் வகைப்படுத்துக

  1. அன்னை மொழியே- ஆசிரியப்பா வகையை சார்ந்தது
  2. முல்லைப்பாட்டு – வெண்பா வகையை சார்ந்தது
  3. காசிக்காண்டம்- கலிப்பா வகையை சார்ந்தது
  4. மலைபடுகடாம்- ஆசிரியப்பா வகையை சார்ந்தது
  5. திருக்குறள்- வெண்பா வகையை சார்ந்தது
  6. பரிபாடல் – ஆசிரியப்பா வகையை சார்ந்தது
  7. நீதி வெண்பா- வெண்பா வகையை சார்ந்தது
  8. முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்- கலிப்பா வகையை சார்ந்தது
  9. கால்க்கணிதம் – ஆசிரியப்பா வகையை சார்ந்தது

கலைச்சொல்

  1. Belief – நம்பிக்கை
  2. Renaissance –மறுமலர்ச்சி
  3. Philosopher –மெய்யியலாளர்
  4. Revivalism- மீட்டுருவாக்கம்

அணி

அணி

செய்யுளுக்கு அழகு சேர்ப்பது

தற்குறிப்பேற்ற அணி

இயல்பாய் நிகழும்,நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றி கூறுவது

“போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

‘வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட”

(கோவலனை இம்மதுரைக்கு வர வேண்டாம் என்று கொடிகள் கை அசைக்கின்றன.)

தீவக அணி

தீவகம்(விளக்கு)

செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருளை விளக்குவது

“சேந்தன வேந்தன் திருநெடுங்கண்,தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள்,இழிகுருதி-பாய்ந்து

திசைஅனைத்தும்,வீரச் சிலைப்பொழிந்த அம்பும்,

மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து"

நிரல்நிறை அணி

 நிரல்- வரிசை,நிறை-நிறுத்துதல்

 சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே  இணைத்து பொருள் கொள்வது

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது”

  இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதாக விள்ங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும், பயனும் அதுவே ஆகும்

தன்மையணி(அல்லது) தன்மை நவிற்சி அணி

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்து பாடுவது

நான்கு வகை

  1. பொருள் தன்மையணி
  2. குணத் தன்மையணி
  3. சாதித் தன்மையணி
  4. தொழிற் தன்மையணி

”மெய்யீற் பொடியும் விரித்த  கருங்குழலும்

கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்-வையைக்கோன்

கண்டளவே தோற்றான்,அக்காரிகைத்தன் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்”

கண்ணகியின் துயர் நிறைந்த தோற்ற்த்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் தன்மையணி எனப்படும்

  Book back

 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார் பொறுத்தல் தலை—உவமை அணி

ஊழி பெயரினும் தாம் பெயரால் சான்றாண்மைக்கு

ஆழி என்ப்படு வார் –உருவக அணி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்-சொற்பொருள் பின்வருநிலை அணி

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்- வஞ்ச புகழ்ச்சி அணி

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற-பிறிது மொழிதல் அணி

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு- வேற்றுமையணி

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்- ஏகதேச உருவக அணி

பண் என்னாம் பாடற்  கியைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்- எடுத்துக்காட்டு உவமை அணி

நச்சப் படாதவன் செல்வம் நடூஊருள்

நச்சு மரம்பழுத் தற்று- உவமை அணி

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்- சொற்பொருள் பின்வருநிலை அணி

கலைச்சொல்

  1. Humanism –மனித நேயம்
  2. Cabinet –அமைச்சரவை
  3. Cultural boundaries-பண்பாட்டு எல்லை
  4. Cultural values-பண்பாட்டு விழுமியங்கள்

 

                              நூல்கள் எழுதியவர்கள்

  1. நாம் ஏன் தமிழ் கற்க வேண்டும்-முனைவர் சேதுமணியன்
  2. தவறின்றித் தமிழ் எழுதுவோம் – மா.நன்னன்
  3. பச்சை நிழல் – உதய சங்கர்
  4. குயில் பாட்டு- பாரதியார்
  5. அதோ அந்த பறவை போல- ச.முகமது அலி
  6. உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன்
  7. திருக்குறள் தெளிவுரை – வ.உ.சிதம்பரனார்
  8. சிறுவர் நாடோடி கதைகள்- கி.ராஜநாராயணன்
  9. ஆறாம் திணை- மருத்துவர் கு.சிவராமன்
  10. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்-நீலமணி
  11. அன்றாட வாழ்வில் அறிவியல்- ச.தமிழ்ச்செல்வன்
  12. காலம்-ஸ்டீபன் ஹாக்கிங்
  13. சிறந்த சிறுகதைகள் பதிமூன்று-வல்லிக்கண்ணன்
  14. குட்டி இளவரசன் –வெ.ஸ்ரீராம்
  15. ஆசிரியரின் டைரி – எம்.பி.அகிலா
  16. தேன்மழை- சுரதா
  17. திருக்குறள் நீதி இலக்கியம் – க,த.திருநாவுக்கரசு
  18. நாட்டார் கலைகள்- அ.கா.பெருமாள்
  19. என் கதை- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்
  20. வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்
  21. நாற்காலிக்காரர்- ந.முத்துசாமி
  22. அறமும் அரசியலும்-மு.வரதராசனார்
  23. அபி கவிதைகள் – அபி
  24. எண்ணங்கள்- எம்.எஸ்.உதயமூர்த்தி
  25. யானை சவாரி- பாவண்ணன்
  26. கல்மரம்- திலகவதி
  27. அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்- ந.முருகேசபாண்டியன்                                            https://tnpscstudymaterialeasy.blogspot.com/p/welcome-page.html

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...