Monday, February 15, 2021

இந்திய அரசியலமைப்பு

 

இந்திய அரசியலமைப்பு(10 th)

  • ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும்
  • அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (USA) தோன்றியது
  • 1946 ஆம் ஆண்டு அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது
  • அரசியல் நிர்ணசபையில் 292  மாகாணப் பிரதிநிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள்,பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் , மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர்  என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர்
  • அரசியல் நிர்ணசபையின் முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் நடைப்பெற்றது. தற்காலிக தலைவர் டாக்டர் சச்சிதானந்த சின்கா
  • டாக்டர் சச்சிதானந்த சின்கா மறைவுக்கு பின் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகவும், H.Cமுகர்ஜி மற்றும் V.T. கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணை தலைவர்க்ளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
  • இக்கூட்டம் 11 அமர்வுகளாக 166 நாட்கள நடைபெற்றது இக்கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன
  • இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர்  டாக்டர் B.Rஅம்பேத்கர்
  • இந்திய அரசியலமைப்பின் தந்தை” டாக்டர் B.Rஅம்பேத்கர்
  • இந்திய அரசியலமைப்பு 22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள், 8 அட்டவணைகள் கொண்டது
  • இந்திய அரசியலமைப்பு 1949 ஆம் ஆண்டு நவம்பர்  26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  • 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது(குடியரசு தினம்)
  • பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்பு சட்டம் இத்தாலிய பாணியில், அவரது கைப்பட எழுதப்பட்டது
இந்திய அரசியலமைப்பு சிறப்புகள்:
  • உலகில் உள்ள அனைத்தி அரசியலமைப்புகளை விட நீளமானது
  • கூட்டாட்சி முறை(மத்திய அரசு, மாநில அரசு)
  • பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை
  • சுதந்திரமான நீதித்துறை. 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை
முகவுரை

  • முகவுரை(preamble)என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதாகும்
  • முகவுரை-> அரசியலமைப்பின் கொள்கைகள், நோக்கங்கள், இலட்சியங்கள் உள்ளடக்கியது
  • முகவுரை-> “ அரசியலமைப்பின் திறவுகோல்” எனப்படுகிறது
  • ஜவகர்லால் நேரு அவர்களின் “ குறிக்கோள் தீர்மானத்தின்” அடிப்படையில் முகவுரை அமைந்துள்ளது
  • முகவுரையானது 1976 ஆம் ஆண்டு 42 வது அரசியலமைப்பு சட்டத் திருத்ததின் படி திருத்தப்பட்டது.(சமதர்மம், சமயச்சார்பினமை, ஒருமைப்பாடு மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன)
  • “ இந்திய மக்களாகிய நாம்” என்ற சொற்களுடன் முகவுரை தொடங்குகிறது
  • 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன் முக்கிய முழக்கங்களாயின

குடியிரிமை

  • சிட்டிசன் என்னும் சொல் சிவிஸ் என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்
  • இதன் பொருள் “ நகர அரசில் வசிப்பவர்
  • இந்திய அரசியலமைப்பின் பகுதி 2 சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையை பற்றி விளக்குகின்றன
  • குடியுரிமை சட்டம்(1955)( குடியுரிமை பெறுதல், குடியுரிமை இழத்தல்). இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ள்து

குடியுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறுதல்:

  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்கள ஆவர்
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவர் , அவரது தந்தை இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் வம்சாவளி மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்
  • இயல்புரிமை மூலம் இந்திய குடியுரிமை பெறலாம்
  • பிற நாடுகள் இந்தியாவுடன் இணைக்கப்படும் பொழுது அந்நாட்டு மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்

குடியுரிமையை இழத்தல்:

  • ஒரு குடிமகன் தாமாக முன் வந்து துறத்தல்
  • வேறு நாட்டின் குடியுரிமை பெறும் பொழுது தானாகவே குடியுரிமையை இழத்தல்
  • இயல்புரிமை மூலம் குடியுரிமை பெற்றவர் தவறான வழியில் பெற்று இருந்தால் அவரது குடியுரிமையை இழக்க நேரிடும்

அடிப்படை உரிமை

  • இந்திய  அரசியலமைப்பு சட்டம் பகுதி(III) 12 ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிறது
  • அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உரிமையின் தாக்கத்தால் உருவாக்க்ப்பட்டது
  • முதலில் 7 அடிப்படை உரிமைகள் இருந்தது. தற்பொழுது 6 மட்டுமே உள்ளது
  • இந்தியாவின் மகாசாசனம்” எனப்படுகிறது

சமத்துவ உரிமை(14-18)

  • பிரிவு 14- சட்டத்தின் முன் அனைவரும் சமம்
  •  பிரிவு15- மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடைசெய்தல்
  • பிரிவு16- பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பளித்தல்
  • பிரிவு 17- தீண்டாமையை ஒழித்தல்
  • பிரிவு 18- இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்

சுதந்திர உரிமை(19-22)

  • பிரிவு 19- பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை
  • பிரிவு 20- குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டைனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
  • பிரிவு 21- வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை
  • பிரிவு 21 A- தொடக்கக்கல்வி பெறும் உரிமை
  • பிரிவு 22- சில வழக்குகளில் கைது செய்து, தடுப்பு காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை

சுரண்டலுக்கெதிரான உரிமை(23-24)

  • பிரிவு 23- கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தை தடுத்தல்
  • பிரிவு 24- தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல்

சமயச்சார்பு  உரிமை(25-28)

  • பிரிவு 25- எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை
  • பிரிவு 26- சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
  • பிரிவு 27- எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்
  • பிரிவு28- மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை

கல்வி, கலாச்சார உரிமை(29-30)

  • பிரிவு 29- சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு
  • பிரிவு 30- சிற்பான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமை

அரசியமலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

பிரிவு 32- தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது நீதிமன்றத்தை அணுகி உரிமையை பெறுதல்

 அரசியமலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

  • நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும். (சில சட்டங்கள் நிரைவேறாமல் தடுப்பதற்க்காக )
  • இந்த ஆணையை உச்ச நீதிமன்றம், மற்றும் உயர் நீதிமன்றம் 5 வகையான நீதிப்பேரானை  வழங்கலாம்

 உச்சநீதிமன்றம் “ அரசியலமைப்பின் பாதுகாவலன” எனப்படுகிறது

அம்பேத்கரின் கூற்று படி சட்டபிரிவு 32 இந்திய அரசியலமைப்பின் “ இதயம் மற்றும் ஆன்மா” ஆகும்

நீதிப்பேரானை:

ஆட்கொணர்வு நீதிப்பேராணை(habeas corpus)

சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது

கட்டளையுறுத்தும் நீதிபேராணை(mandamus)

மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினை சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றி கொள்ள முடியும்

தடையுறுத்தும் நீதிப்பேராணை(prohibition)

ஒரு கீழ் நீதிமன்றம் தனது, சட்ட எல்லையை தாண்டி செயல்படுவதை தடுக்கிறது

ஆவண கேட்பு பேராணை(certiorari)

உயர்நீதிமனறம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்ப செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்

தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை(quo – warranto)

சட்டத்திற்கு புறம்பாக தகாத முறையில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுவதை தடை செய்கிறது

1978 ஆம் ஆண்டு 44வது அரசியலமைப்பு சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31 ) நீக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி XII  , பிரிவு 300A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது

அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல்

  • சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுதலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படுல் பொழுது, சட்டப்பிரிவு 19(சுதந்திர உரிமை)  நிறுத்தப்படுகிறது
  • மற்ற உரிமைகளையும் தடை செய்ய குடியரசுதலைவருக்கு அதிகாரம் உண்டு. இது நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்

அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்:

  • இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி IV சட்டபிரிவு 36 ல் இருந்து 51 வரை
  • பொருளடக்கம், மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது(சமதர்ம, காந்திய, தாராள அறிவு சார்ந்தவை)
  • இந்த கொள்கைகளை நீதிமன்றாத்தால் வழுக்கட்டாயமாக செயற்படுத்த முடியாது
  • சமுதாய நலனை மக்களுக்கு தருவதே இதன் நோக்கமாகும்
  • இவை அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை
  • இதனை இந்திய அரசியலமைப்பின் “ புதுமையான சிறப்பம்சம்” என்கிறார் அம்பேத்கர்
  • 2002 ஆம் அண்டு 86 வது அரசியலமைப்பு சட்டத்திருத்ததின் படி பிரிவு 45 திருத்தப்பட்டு பிரிவு 21 A கீழ் தொடக்க கல்வி அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டுள்ளது(Early Childhood care and Education-ECCE). 6 வயது வரை )

அடிப்படை கடமைகள்

முன்னால் சோவியத் யூனியன் (ussr)அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டதாகும்

1976  ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42 வது சட்டதிருத்தம் (சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி) குடிமக்களின் பொறுப்புகளை சேர்த்தது

இந்த சட்டதிருத்தம் பகுதிIV A  என்ற ஒரு புதிய பகுதியை சேர்த்தது. இந்த புதிய பகுதி 51A என்ற ஒரெயொரு பிரிவை மட்டும் கொண்டது

  • 1.      ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசியலமைப்பு அதன் கொள்கைகள், நிறுவனங்கள், தேசியகீதம் , தேசிய கொடி, தேசிய சின்னங்கள் ஆகியவற்றை மதித்தல்
  • 2.      சுதந்திர போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்த உயரிய நோக்கங்களை போற்றி வளர்த்தல்
  • 3.      இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, இவற்றை பேணிப் பாதுகாத்தல்
  • 4.      தேசப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் பொழுது தேசப்பணியாற்ற தாயாராயிருத்தல்
  • 5.      சமய, மொழி மற்றும் பிராந்திய அல்லது பகுதி சார்ந்த வேறுபாடுகளை மறந்து பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் பழக்கத்தை நிராகரித்து, பெண்களின் கண்ணியத்தை காக்கும் எண்ணங்களை மேம்படுத்தி இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதரத்த்ய்வத்தை வளர்தல்
  • 6.      நமது உயர்ந்த பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்து  பாதுகாத்தல்
  • 7.      காடுகள், ஏரிகள், ஆறுகள் வனவிலங்குகள் மற்றும் உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுசூழலை பாதுக்காத்து மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல்
  • 8.      அறிவியல் கோட்பாடு, மனிதநேயம், ஆராய்ச்சி மனப்பான்மை  மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல்
  • 9.      வன்முறையை கைவிட்டு பொது சொத்துகளை பாதுக்காத்தல்
  • 10.  தனிப்பட்ட மற்றும் கூட்டுசெயல்பாடுகள் என அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்தவற்றை நோக்கி செயல்பட்டு தேசத்தின் நிலையான உயர்ந்த முயற்சி மற்றும் சாதனைக்காக உழைத்தல்
  • 11.  இந்திய குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல்(86 வது திருத்த சட்டம் 2002 இன் படி 51 (A) கீழ் 11 வது அடிப்படை கடமை அரிமுகப்படுத்தப்பட்டுள்ளது)

மத்திய மாநில உறவுகள்

  •   இந்திய நாடாளுமன்றம் இந்தியா முழுவதும்(மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்) சட்டமியற்றும் அதிகாரம் கொண்டது
  • இந்திய அரசிலமைப்பின் ஏழாவது அட்டவணை மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வினை பற்றி கூறுகிறது
  • அவை மத்திய பட்டியல்(97),மாநில பட்டியல்(66), பொதுப்பட்டியல்(47) என்று அதிகாரம் வழங்கியுள்ளது
  • மத்திய பட்டியல் சட்டமியற்றும் அதிகாரம் (நாடாளுமன்றம்)
  • மாநில பட்டியல் சாமியற்றும் அதிகாரம்(மாநில சட்டமன்றம்)
  • பொது பட்டியல்(  நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் இரண்டிற்க்கும் அதிகாரம் உண்டு. ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மத்திய அரசு இயற்றும் சட்டமே இறுதியானது)
  • தற்பொழுது மத்திய அரசு பட்டியலில் 100 துறைகள், மாநில அரசு பட்டியலில் 61 துறைகள், பொது பட்டியலில் 52 துறைகள் உள்ளது
  • 1976 ஆம் ஆண்டு 42 ஆவது சட்டத்திருத்ததின் படி  5 துறைகள் மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.(கல்வி,காடுகள், எடைகள் மற்றும் அளவுகள், பறவைகள் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு,பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம்(உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தவிர)
  • மத்திய அரசு அதிகாரம்- நாடாளுமன்றம்  தொடர்பான விஷயங்களில் சட்டங்களை இயற்ற சிறப்பு அதிகாரம்.மாநில அரசு செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை அங்கீகரிப்பது
  • இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி XII சட்டப்பிரிவு 268 ல் இருந்து 293 வரை உள்ள பிரிவுகள் மத்திய மாநில அரசுகளின் நிதிசார்ந்தது
  • இந்திய அரசியலமைப்பு சட்டபிரிவு 280 ந் கீழ் குடியரசுதலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக்குழு பரிந்துறையின் அடிப்படையில் மத்திய அரசால் சில வரிகள் விதிக்கப்பட்டு மத்திய அரசாலும் மாநில அரசாலும் பிரித்துக் கொள்ளப்படுகிறது
  • 1969 இல் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு டாக்டர் P.V. இராஜமன்னார் தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது
  • அரசியலமைப்பு சட்டப் பிரிவு XVII இல் 343 லிருந்து 351 வரையுள்ள சட்டபிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன
  • தொடக்கத்தில் 14 மொழிகள் அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டது. தற்பொழுது 22 மொழிகள் உள்ளன
  • 2004 ஆம் ஆண்டு முதல் செம்மொழிக்கு தகுதி பெற்ற மொழிகள்(தமிழ்-2004, சமஸ்கிருதம்- 2005, தெலுங்கு- 2008, கன்னடம்- 2008, மலையாளம்- 2013, ஒடியா- 2014)
  • குடியரசு தலைவரால் 352 ன் பிரிவின் கீழ் அவசரநிலை பிரகடணம் அறிவிக்கலாம்.(வெளிப்புற அவசரநிலை- வெளிநாட்டினர் ஆக்கரமிப்பு காரணமாக, உள்நாட்டு அவசரநிலை- ஆயுதமேந்திய கிளர்ச்சி)(1962, 1971, 1975 ஆண்டு அவசரநிலை பிரகடணம் அறிவிக்கப்பட்டது)
  • மாநில அரசால் கட்டுபடுத்தாத சூழல் ஏற்படும் போது அளுநர் அறிக்கை அளிக்கும் போது குடியரசு தலைவர்  356  கீழ் அவசர நிலை பிரகடணம் செய்யலாம்.
  • இது மூன்று ஆண்டுகள் வரை தொடரலாம்(சட்டபிரிவு  352 நடைமுறையி இருந்தாலும், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்று சான்றளித்தாலும் மட்டுமே ஓராண்டுக்கு மேல் தொடர முடியும்)
  • 1951 ல் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது

நிதி சார்ந்த அவசரநிலை

  • நிதிநிலை தன்மை, இந்தியாவின் கடன் தன்மை, இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில் இருந்தால் 360 கீழ் நிதி சார்ந்த அவசரநிலை பிறப்பிக்கலாம்
  • இந்த நிலையில் மத்திய மாநில அரசு ஊழியர்களின் ஊதியம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் நீதிபதிகைன் ஊதியம் குறைக்கப்படும்
  • இந்த நிதி சார்ந்த அவசரநிலை இந்தியாவில் அறிவிக்கப்படவில்லை

அரசியலமைப்பின் சட்ட  பகுதி XX ல் 368 வது சட்டபிரிவு அமெண்ட்மெண்ட் ”amendment” ->சட்டதிருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் பற்றி கூறுகிறது

மசோதா நாடாளுமன்றத்தில் 2/3 பங்கு வாக்களித்தால் மட்டுமே குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டதிருத்தம் கொண்டு வர முடியும். மாநில சட்ட மன்றத்தால் சட்டதிருத்தம் கொண்டு வர முடியாது

 368 வது சட்டதிருத்தம் மூன்று வழிகளில் நடைபெறுகிறது

  • நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதி பெரும்பானமை
  • நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதி பெரும்பானமை
  • நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதி பெரும்பானமையுடன் பாதிக்கும் மேற்ப்ட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலை பெறுவதன் மூலம்

அரசியலமைப்பின் 42 வது சட்டத்திருத்தம் “ குறு அரசியலமைப்பு” என அறியப்படுகிறது

அரசியலமைப்பு சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் M.N.வெங்கடாசலய்யா தலைமையில் குழு அமைத்தது

2007 ஆம் ஆண்டு M.M பூஞ்சி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது

கலை சொற்கள்

  • முகவுரை- Preamble
  • சமய சார்பற்ற அரசு- Secular State
  • பாகுபாடு- Discrimination
  • நீதிப்பேராணை- Writ
  • இறையாண்மை- Sovereignty
  • பாரம்பரியம்- Heritage
  • தன்னாட்சி- Autonomy
  • பிரகடனம்- Proclamation

Book Back

சரியான விடையை தேர்ந்தெடு

  1. 1. கீழ்காணும் வரிசையில் “ முகவுரை” பற்றிய சரியான் தொடர் எது ?இறையாண்மை, சமதர்ம , சமயச் சார்பற்ற ஜனநாயக குடியரசு
  2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது ?ஒரு முறை
  3. இந்திய அரசியலமைப்பு தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது? ஒற்றை குடியுரிமை
  4. ஒரு வெளிநாட்டவர், கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும்? இயல்புரிமை
  5. மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி (சமத்துவ உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சொத்துரிமை, கல்வி மற்றும் கலாச்சார உரிமை)
  6. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையை பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை பெற்றோர்களின் பூர்விக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்கு செல்லுதல்
  7. இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் இந்திய உச்சநீதிமன்றம் அணுகி தங்களது அடிப்படை உரிமைகளை பெறலாம்
  8. பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர் அம்பேத்கர் அவர்களால் ‘ இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது? அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
  9. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியும்? தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் அணையினால்
  10. நமது அடிப்படை கடமைகளை ரஷ்யா அரசியலமைப்பு இடமிருந்து பெற்றோம்
  11. எந்த பிரிவின் கீழ் நிதி நிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்? சட்டபிரிவு 360
  12. எந்த குழுக்கள்/ கமிஷன்கள் மத்திய மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன? சர்க்காரியா குழு, இராஜமன்னார் குழு

கோடிட்ட இடங்களை நிரப்புக

  • முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது
  • அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்கா    தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்  நவம்பர் 26 மற்றும் ஆண்டு  1949
  •   நீதி பேராணைகள் சட்டப்பிரிவு 32ல் குறிப்பிடப்படுகின்றன
  • இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள்   பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன

பொருத்துக

  1. குடியுரிமை சட்டம்-1955
  2. முகவுரை-ஜவஹர்லால் நேரு
  3. குறு அரசியலமைப்பு-42 வது அரசியலமைப்பு சட்டதிருத்தம்
  4. செம்மொழி-தமிழ்
  5. தேசிய அவசர நிலை-1962

 

 

 


No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...